LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

தும்பைப்பட்டியில் பிறந்த தூயவர்

 இ ந்த உலகத்தில் இப்போதெல்லாம் மக்கள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது . ஆனால் மனிதர்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது . இது ஓர் அறிஞரின் கணிப்பு . அதிர்ச்சியாக இருந்தாலும் இது தான் உண்மை . உருவத்தில் மனிதர்களாக இருக்கிற பலர் மனதால் மனிதர்களாக இருப்பதில்லை . உருவத்தாலும் , உள்ளத்தாலும் மனிதனாக வாழ்ந்து காட்ட தும்பைப்பட்டியில் ஒரு பிள்ளை பிறந்தது . அதுதான் கக்கன் என்ற பிள்ளை .

தமிழகத்தின் வரலாற்றில் மதுரை மாவட்டத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு . மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் நாட்டுக்கள்வர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தார்கள் . இவர்கள் , மதுரை நாயக்கர்களின் காலத்திலும் பின்னர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் காலத்திலும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து போகாமல் தன்னரசு கொண்ட தனிக்கள்ளர் நாடாகவே இருந்துவரப் போராடி வந்துள்ளனர் . மதுரை அரசிற்கு எதிராக , வடக்கேயிருந்து வரும் படைகளை எதிர்த்துச் சமாளிக்க , இந்த நாட்டுக்கள்ளர்களின் ஆதரவு மதுரையின் ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டது . எனவே தான் வல்லமை வாய்ந்த மதுரை திருமலைநாயக்கரும் அரசியல் கயமை நிறைந்த கான்சாகிப்பும் இக்கள்ளர்களின் தன்னாட்சியைப் பொறுத்துக் கொண்டிருந்தது மட்டுமின்றி , அவ்வப்பொழுது தட்டிக்கொடுத்து வேலை வாங்கியும் வந்தார்கள் . ஆங்கில ஆட்சியாளர்கள் , இக்கள்ளர்களின் தொல்லை தாங்கமுடியாமல் இவர்களைக் கொள்ளையர்கள் என்றும் , கொடியவர்கள் என்றும் , குற்றப்பரம்பரையினர் என்றும் குறித்து வைத்துள்ளனர் . ஆனால் , இக்கள்ளர்களின் கிராம உள்ளாட்சி முறையும் நாட்டுப்புறப் பழக்க வழக்கங்களையும் , கலைப்பிரியங்களையும் , கோவில்களையும் அதனைச் சார்ந்த திருவிழாக்களையும் மையமாகக் கொண்டு அமைந்த இவர்களின் சமூகவாழ்வும் , அதில் அவர்கள் கடைப்பிடித்த ஒழுங்கும் , கட்டுப்பாடுகளும் ஆங்கிலேயர்கள் அறியாதவை . தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் முக்குலத்தோரையும் அரிசனமக்களையும் இணைந்து வாழச் செய்யவிடாமல் , கூர்மதி கொண்டவர்களின் சதியினால் இனக்கலவரங்கள் ஏற்பட்ட காலத்தில் கூட இப்பகுதியில் கள்ளர்களும் , அரிசனமக்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து இணைந்தே வாழ்ந்து வந்துள்ளனர் . கள்ளர்களின் திருவிழாக்களில் அரிசன மக்கள் சாமியாடிக் குறி சொல்லுவதும் அரிசன மக்களைப் பூசாரிகளாகக் கொண்ட கோவில்களில் கள்ளர்கள் வழிபாடு செய்து விபூதி பெற்றுக்கொள்வதும் வருடப்பிறப்பு சித்திரை மாதம் முதல்நாளில் , கள்ளர்கள் கையில் வெற்றிலை பிடித்து ஏர்பிடித்து உழும்நாளில் அரிசனக்குடிகளைத் துணைக்கு அழைத்துச் செல்வதும் இன்றும் கண்குளிரக் காணவேண்டிய காட்சிகளாகும் . அந்தளவிற்கு அங்கு பொறுப்பு , கண்ணியம் , பாசம் , விசுவாசம் , சகிப்புத்தன்மை ஆகியன இருந்து வந்தன . இக்கள்ளர்களின் நாட்டுப் பிரிவினையில் , மேலூரை மையமாகக் கொண்ட நடுவி நாடும் , கிழக்கே வெள்ளமேற்கே வல்லாளபட்டி , அழகர் கோவிலை மையமாகக் கொண்ட மேலநாடும் , வடக்கே அட்டட்டியை மையமாகக் கொண்ட சிறுகுடி நாடும் இன்றும் கள்ளர்களின் சமுதாய வாழ்வில் முக்கிய இடத்தைப் பெற்றுவருகின்றன , இதில் சிறுகுடி நாட்டைச் சார்ந்த கிராமம் தும்பைப்பட்டியாகும் .

மதுரையிலிருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் மேலூருக்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் தும்பைப்பட்டி அமைந்துள்ளது . மதுரையிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . 1990- ம் ஆண்டின் நிலவரப்படி , தும்பைப்பட்டிக் கிராமத்தின் மக்கள்தொகை 2,647 என்றுதான் இருந்தது என்றால் , கக்கன்ஜி பிறந்த காலத்தில் அதன் மக்கள்தொகை எவ்வளவு சிறியதாக இருந்திருக்கும் என நினைத்துப் பார்க்க முடிகிறது . கக்கன்ஜி பிறந்து வளர்ந்த கிராமம் இதுவேயாகும் . இங்குள்ளோர் தும்பைப்பூமாலை போட்டு மகிழ்ந்ததால் தும்பைப்பட்டி என்ற பெயர் எழுந்தது .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.