33-வது ஆசிய பசிபிக் நாடுகளின் கருத்தரங்கம் டில்லியில் நாளை நடைபெற இருக்கிறது. இதற்காக டெல்லி வந்த, ஆசிய பசிபிக் உறுப்பு நாடுகளை சேர்ந்த சுமார் 80 உறுப்பினர்கள், டெல்லி திகார் ஜெயிலை பார்வையிட்டனர். அவர்களிடையே பேசிய சிறை அதிகாரி சுனில் குப்தா கூறியதாவது, சிறைகளில் தற்போது மூன்றாம் நிலையில் உள்ள சிறைகைதிகள் நாள் ஒன்றுக்கு 55 ருபாய் வருமானம் ஈட்டுகிறார்கள். இதனை அதிகரிக்கும் வகையில் மற்றும் சிறையின் நிதி ஆதாரங்களை அதிகரிக்கும் வழிமுறைகளையும் சிறைத்துறை ஆராய்ந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் சிறை கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் டிஜே என்ற முத்திரையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் ஆண்டு வருமானம் 32 கோடியே 50 லட்சம் ரூபாயாக உள்ளது என சுனில் குப்தா தெரிவித்துள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்த உறுப்பினர்கள், தங்களது நாட்டின் சிறைகளில், இந்த உற்பத்தில் முறையை அறிமுகப்படுத்தப்போவதாக, தெரிவித்தனர்.
|