திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் தற்போது இல்லை என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. போசும், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. கலைஞர் கருணாநிதிதியும் மரணம் அடைந்ததால் இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று ஒவ்வொருவருமே எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த நிலையில்பருவமழை காலம் என்பதால் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை தற்போதைக்கு நடத்த வேண்டாம் என தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தற்போது வெளியிடவில்லை என டெல்லியில் செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் கூறி உள்ளார். மேலும் தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளதாக கூறியுள்ளார்,
|