திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ஒரே நாளில் ரூ.1.21 கோடி வசூலானது.
திருப்பதி கோயிலில் பக்தர்கள் இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 31 அறைகள் நிரம்பி வெளியே டிபிசி பாலம் வரை வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் 20 மணி நேரத்துக்குப் பின்னரே சுவாமி தரிசனம் செய்தனர்.
மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ரூ.300க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தனர்.
காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பக்தர்கள் ரூ.1.21 கோடியை காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
|