LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    பழங்கள்-தானியங்கள் Print Friendly and PDF

தக்காளி ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் அவசியமானது !!

தக்காளி காய்கறி வகையைச் சேர்ந்தது என்பது பலரின் எண்ணம். ஆனால் உண்மையில் தக்காளி பழவகையைச் சேர்ந்தது.


ஆரோக்கியத்திற்கு :


தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, அதிக அளவில் உள்ளது. இதுதவிர கால்சியம், பாஸ்பரஸ்; மற்றும் இரும்புச்சத்து வைட்டமின் பி, மாவுச்சத்து ஆகியவையும் உள்ளது. இதில் மாவுச்சத்து குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். 


தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


கோடை வெயிலில் வெளியே சென்று வந்த பிறகு ஒரு தக்காளி துண்டை வைத்து சருமத்திற்கு மசாஜ் செய்தால் கருமை நீங்கி முகம் பொலிவு பெரும்.


கோடை காலத்தில் உணவில் அதிகளவு தக்காளியை சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் உடல் வறட்சியடையாமல் பார்த்துக் கொள்ளும்.


ஆண்கள் தினமும் தக்காளியை உட்கொண்டு வந்தால், 20 சதவிகிதம் புரோஸ்டேட் நோய் வரும் அபாயத்தை குறைக்கலாம்.


தினமும் தக்காளி சாற்றினை கொண்டு மசாஜ் செய்து வந்தால், பருக்கள் வருவது குறைவதுடன் தழும்புகளும் மறையும்.


வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து ஒன்றாக சேர்ந்து இருக்கும் தக்காளியை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கும்.


தக்காளி சிறுநீரை நன்கு வெளியேற்றுவதுடன் கிருமிகள் அண்டாமல் தடுக்கும். ரத்தசோகை, கல்லீரல் கோளாறு ஆகியவற்றுக்கும் மருந்தாகும். தக்காளி பழச்சாற்றை தினசரி குடித்து வந்தால் போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.


தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் பார்வை கோளாறுகளை தடுத்து ஆரோக்கியமான பார்வைக்கு வழிவகுக்கும்.


கைகளில் ஏதேனும் வெட்டு காயம் ஏற்படும் பட்சத்தில், பச்சை தக்காளியை வெட்டு ஏற்பட்ட இடத்தில் வைத்தால் ஆன்டி-செப்டிக்காக செயல்படும்.


தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம்.


தக்காளியைப் பழமாகச் சாப்பிட்டாலும் இரசமாகச் சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும்; உண்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும். 

இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள்


அழகுக்கு : 


ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.


தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும். 


தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.


உருளைக்கிழங்கு துருவல் சாறு 1 தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும்.


சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்களி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள்.


தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம்.

by Swathi   on 20 Mar 2016  1 Comments
Tags: Tomato   Thakkali   தக்காளி              

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
தக்காளி ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் அவசியமானது !! தக்காளி ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் அவசியமானது !!
தக்காளி முருங்கைக்காய் குழம்பு தக்காளி முருங்கைக்காய் குழம்பு
வரகரிசி தக்காளி சாதம் வரகரிசி தக்காளி சாதம்
கருத்துகள்
18-Feb-2017 00:07:01 சி.சாந்தி said : Report Abuse
தக்காளியில் இவ்வளவு பயனா!!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.