|
||||||||||||||||||
தக்காளி, வெங்காயம் குச்சி ஐஸ்… |
||||||||||||||||||
![]() இந்தக் கதையில் மூன்று நெருங்கிய நண்பர்கள் இருக்கிறாங்க. அவங்க யார் யாருங்கிறதைக் கேட்டா அவங்க எப்படி நண்பர்கள் ஆனார்கள் என்று எல்லாம் கேட்கக் கூடாது. கதையில் கேள்வி இல்லை என்று உங்களுக்குத் தெரியுமில்லையா?
தக்காளி, வெங்காயம், குச்சி ஐஸ் இவங்க மூணுபேருதான் அந்த நெருங்கிய நண்பர்கள்.
வெங்காயத்தோடு மாமாதான் பூசணிக்காய். பூசணிக்காயை வெங்காயம் பூசணி மாமா பூசணி மாமா என்று தான் கூப்பிடும். ஒருநாள் வெங்காயம் தன்னோட நண்பர்கள் கிட்ட "எனக்கு பூசணிமாமாவைப் பார்க்கணும் என்று தோணுது. நான் நாளைக்குப் புறப்படலாம்ணு இருக்கேன்'' அப்படீண்ணு சொல்லியது.
"அப்படியா, நாங்களும் வருகிறோம். நாம் மூன்றுபேரும் சேர்ந்தே போவோம்'' அப்படீண்ணு சொல்லியத குச்சி ஐஸ்.
"தனியாப் போனா பயணம் சப்பாக இருக்குமேண்ணு நினைத்துகொண்டிருந்தேன். ரொம்ப நன்றி நம்ம மூன்றுபேரும் பேசி கொண்டே போகலாம்.'' வெங்காயம் சந்தோஷமாக சொல்லியது.
அடுத்த நாள் மூன்று பேரும் பயணத்துக்குப் புறப்பட்டாங்க. முதலில் நடக்கும்போது நல்ல சுகமாத்தான் இருந்தது. ஆனால் கொஞ்ச நேரமானதும் கால் வலிக்கத் தொடங்கியது. உடம்பு வேர்த்தது. எங்காயாவது கொஞ்சம் ஒய்வு எடுத்தாப் பரவாயில்லைணு மூன்று பேருக்கும் தோன்றியது.
"இதை பாருங்க, அந்தப் பக்கமாக குளிர்ந்த காற்று வீசுது. அங்கு குளம் இருக்கலாம்ணு நினைக்கிறேன். வாங்க என்று தக்காளி கூப்பிட்டது. கொஞ்ச தூரம்தான் நடத்திருப்பாங்க அதுக்குள்ள ஒரு குளம் தெரிந்தது. மூன்றுபேரும் ஓடிப்போய் குளக்கரையிலிருந்த மரநிழலில் உட்க்கார்ந்தாங்க.
"நல்ல சுகமா இருக்கிறது'' வெங்காயம் சொல்லியது. "இந்தக் குளத்தில் குளிச்சா இருக்கிற கொஞ்ச நஞ்ச களைப்பும் ஓடிப்போயிடும, குளிக்கலாமா என்று தக்காளி கேட்டது. "ஆகா... நல்லாச் சொன்னாய் குளிக்கலாமா?'' ஐஸ் ஆர்வமாக கேட்டது.
"ஐய்யய்யோ... நீ குளிக்கக்கூடாது. நீ தண்ணீரில் இறங்கினா செத்துப்போயிடுவே. ஞாபம் வைத்துக்கொள். நாங்க இரண்டுபேரும் குளிக்கப்போறோம் எங்களுக்கு எதுவும் ஆகாது. ஆனா நீ எச்சரிக்கையா இருக்கணும். குளக்கரையோட பக்கத்துக்குக்கூட வந்திராதே என்று...'' வெங்காயம் எச்சரிக்கை செய்தது.
குச்சி ஐஸோட முகம் அப்படியே வாடிப்போனது. அது மனசில்லா மனசோடு வெங்காயத்தைப் பார்த்து சரிங்கிறமாதிரி தலையாட்டியது.
அப்புறம் தக்காளியும் வெங்காயமும் தொப்புத் தொப்புண்ணு தண்ணீரில் குதிதாங்க. தண்ணீரை வாரி ஒருத்தர் மேல ஒருத்தர் அடிச்சுக்கிட்டாங்க. தண்ணீரில் முங்கி முங்கி எழுந்தாங்க. அவங்க போடற கும்மாளத்தைப் பார்த்து குச்சி ஐஸ்ஸுக்கு தானும் குளிக்கணும்ணு ஆசை வந்தது. அதுவும் தண்ணீரில் குதித்தது. அவ்வளவுதான். பாவம் குச்சி ஐஸ் அதோட உடம்பு தண்ணீரில் கரைய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமா கரைந்து அது செத்துப் போனது. குளித்து முடித்து வெளியே வந்த வெங்காயமும் தக்காளியும் எங்கே குச்சி ஐஸ்ஸைக் காணோம் என்று சுத்தும்முத்தும் தேடினாங்க.
"ஐயோ அங்க பாரு வெறும் குச்சி மட்டும் தண்ணீரில் மிதக்குது. நாம சொன்னதைக் கேட்காம ஐஸ்ஸும் குளிக்க தண்ணீரில் இறங்கிருக்கு. ஐய்யய்யோ... என் நண்பன் செத்துட்டானே அப்படீண்ணு தக்காளி ஒஒ.. ண்ணு ஆழ ஆரம்பித்தது. அழுதுது அழுதுது. நிறுத்தாம அழுதுது. அழுதுகிட்டே நடந்தது. அப்போ சாலையில் ஒரு காளை வண்டி வந்தது, கண்ணில் தண்ணியோட நடந்த தக்காளிக்கு கண்ணு சரியாகத் தெரியவில்லை. அது காளை வண்டியோட சக்கரத்தில் பட்டு நசுங்கிப் போனது. அவ்வளவுதான் வெங்காயம் ஆழத்தொடங்கியது. அழுதுது. அழுதுது நிறுத்தாம அழுதுது. அழுதுகிட்டே பூசணிமாமாவோட வீட்டுக்குப் போயிவிட்டது.
பூசணிமாமா, நீ என் அழுகிற. அழுகையை நிறுத்து. என்ன நடந்தது சொல்லுண்ணு கேட்டுது. குச்சி ஐஸ் செத்துப் போனப்ப அழுறதுக்கு தக்காளியும் நானும் இருந்தோம். தக்காளி செத்துப்போனப்போ அழறதுக்கு நான் இருந்தேன். நான் செத்துப்போனா அழுறதுக்கு யார் இருங்காங்கண்ணு சொல்லிட்டு நிறுத்தாம அழுதது.
பூசணிமாமா ஒரு நிமிடம் யோசிச்சார். கவலைப்படாதே. உன்னை யாரு கொல்லறாங்களோ அவங்க அழுவாங்க என்று சொல்லியது. அதனாலதான் வெங்காயத்தை யார் ஊரிச்சாலும் அவங்க அழறாங்க. நீங்க வெங்காயத்தை உரிச்சிருக்கீங்களா... உரிச்சுப் பாருங்க நீங்களும் அழுவீங்க |
||||||||||||||||||
by Swathi on 11 Mar 2018 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|