ஓமன் நாட்டில், எண்ணெய் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை பெறுவதற்காக, லஞ்சம் கொடுத்த இந்தியர் முகமது அலிக்கு 15 வருடம் சிறை தண்டனை விதித்து ஓமன் நாட்டு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின், கேரளா மாநிலத்தை சேர்ந்தவர், முகமது அலி. இவர் ஓமன் நாட்டில் 'கல்பார் இன்ஜினியரிங்' என்ற பெயரில் பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்காக ஓமன் நாட்டு எண்ணெய் நிறுவனத்தின், ஒப்பந்தத்தை பெறுவதற்காக, கணிசமான தொகையை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உட்பட ஏழு பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மஸ்கட் நீதிமன்றம் கட்டுமான நிறுவன உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு தலா 15 ஆண்டு சிறையும், உரிமையாளருக்கு ரூ 28 கோடி அபராதமும், மேலாளருக்கு ரூ 8.5 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்களின் தண்டனை காலம் முடியும் போது இவர்கள் இருவரையும், ஓமன் நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
|