தடகள பயிற்சியாளருக்கு மத்திய அரசு விருது
மதுரையைச் சேர்ந்த ஜெ. ரஞ்சித் குமார் அவர்கள் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். 2019ம் ஆண்டு மொராக்கோ நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான மாற்றுத் திறனாளி தடகள போட்டியில் இந்திய அணி பயிற்சியாளராகவும், மேலாளராகவும் இருந்து அதிக தங்கப்பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒப்பந்த தடகளப் பயிற்சியாளராக உள்ளார். இவரது சேவை, திறமை ஆகியவற்றைப் பாராட்டி மத்திய அரசு தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்வு செய்துள்ளது.
|