LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

திருச்சி-சென்னை புதிய விமானச் சேவை அறிமுகம்

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து தினந்தோறும் சென்னை உள்படப் பல்வேறு உள்நாடுகளுக்கும், சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானச் சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
 
 
உள்நாட்டைப் பொறுத்தவரை  சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள்  இயக்கப்படுகின்றன. இதுவரை இந்த உள்நாட்டுச் சேவைகளை மொத்தமாக இண்டிகோ நிறுவனம் மட்டுமே வழங்கி வந்தது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் அதிகக் கட்டணங்களைச் செலுத்திப் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. . 
 
 
இந்த நிலையில், மார்ச் 23-ந் தேதி முதல் திருச்சியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சிக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய விமானச் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விமானம் மாலை 6:45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, 7:45 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தரும்.
 
 
பின்னர், 8:15 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு, 9:15 மணிக்கு சென்னை விமான நிலையத்தைச் சென்றடையும். தற்போது வரை இண்டிகோ நிறுவனம் திருச்சி-சென்னை வழியில்  5 சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது கூடுதலாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆறாவது சேவையைத் தொடங்கவிருக்கிறது. 
 
 
இதன் மூலம் கூட்ட நெரிசல் குறையும் என்றும், விடுமுறை போன்ற பண்டிகை நாட்களில் கட்டணமும் குறையும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

 

 

by hemavathi   on 06 Feb 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஒரு  கேனில் 30 முறை மட்டுமே தண்ணீரை நிரப்ப வேண்டும் - குடிநீர் விற்பனைக்கான நெறிமுறைகள் அறிவிப்பு ஒரு கேனில் 30 முறை மட்டுமே தண்ணீரை நிரப்ப வேண்டும் - குடிநீர் விற்பனைக்கான நெறிமுறைகள் அறிவிப்பு
நவீன வசதிகளுடன் அரசு விரைவுப் பேருந்துகள் - ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வரும்! நவீன வசதிகளுடன் அரசு விரைவுப் பேருந்துகள் - ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வரும்!
ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
தெக்கத்தி மண்ணின் படைப்பாளி  இரா.நாறும்பூநாதன்  காலமானார். தெக்கத்தி மண்ணின் படைப்பாளி இரா.நாறும்பூநாதன் காலமானார்.
சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா? சென்னைக்கு அருகே புதிய நகரம் - என்னென்ன வசதிகள் இருக்கும் தெரியுமா?
தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள் தமிழக நிதிநிலை அறிக்கை 2025- முக்கியமான 20 அறிவிப்புகள்
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு? தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025- எந்தத் துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத்  தமிழக அரசு திட்டம் இளையராஜாவின் அரை நூற்றாண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடத் தமிழக அரசு திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.