சமூக வலைதள உலகில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் டுவிட்டர் இணையதளம், வாடிக்கையாளர்களை கவர புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில், இயற்கை சீற்றம் போன்ற அசாதாரண சூழ்நிலைகளில், வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் ‘டுவிட்டர் அலார்ட்’ சேவையை டுவிட்டர் நிறுவனம் நேற்று துவக்கி உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா உட்பட சில நாடுகளில் இயற்கை சீற்றம் போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கை மெசேஜ் தரும் சேவையை செய்யும் டுவிட்டர், எச்சரிக்கை தகவல்களை பரஸ்பரம் தாங்களாகவே பரிமாறிக் கொள்ளும் வகையில் உலகளாவிய சேவையை நேற்று ஆரம்பித்துள்ளது. டுவிட்டர் அக்கவுன்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு போனிலும் எச்சரிக்கை தகவல்களை சொல்ல தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிவி, ரேடியோ போன்ற தகவல்தொடர்பு சாதனங்கள், மின்சார துண்டிப்பு போன்றவை ஏற்படும் போது டுவிட்டர் அலார்ட் சேவை பயன்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
|