LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com

ட்விட்டர் என்ற ஆலமரம்

(மதுரை ட்விட்டர் சந்திப்பில் @chinnapiyan அவர்களால் உருவாக்கப்பட்ட வாழ்த்துமடலின் எழுத்துவடிவம்.)

எத்தனை பறவைகள் உன்னிடம் தஞ்சம்
அத்தனைக்கும் அளிக்கிறாய் மஞ்சம்

இலக்கியம் பேசும் பறவைகள் என்ன
கவிதைகள் பாடும் பறவைகள் என்ன

உள்நாட்டு பறவைகள் என்ன வெளிநாட்டு பறவைகள் என்ன
பல்நோக்குடன் வரும் பல் டாக்டர் பறவை என்ன

உற்றவர்க்கு உள்ளன்போடு உதவிடும் பறவைகள் என்ன
மற்றவர்க்கு அறுவையானாலும் வந்து போகும் பறவைகள் என்ன

அப்பப்பா எண்ணிலடங்கா பறவைகளின் ரகம்
எப்பவுமே கேட்டு கொண்டிருக்குமே ஆனந்த ராகம்

சிறு கதைகளாகட்டும் சிங்கார கருத்துக்களாகட்டும்
அறுசுவையுடன் பரிமாறபடுகிறது உன்னிடத்திலே

கோபதாபங்களை கொட்டும் பறவைகள் எத்தனை
உள்ள குமுறல்களை கொட்டி தீர்ப்பவைகள் எத்தனை

சமுதாயத்தின் கொடுமைகளை சாடும் பறவைகளுக்கு
அமுதமாய் தீர்பளிக்கிறாய் உண்மூலம் மக்களுக்கு

நகைச்சுவை கேலி கிண்டல் நையாண்டி என
வகை வகையாக சிரிக்க முடிகிறது உன்னிடம்

துக்கம் சோகம் என்று அழமுடிகிறது உன்னிடத்தில்
தூக்கம் மறந்து ஆறுதல் அளிக்கிறாய் என்னிடத்தில்

ஒரு கிளையில் காதல் கொஞ்சும் பறவைகள்
மறு கிளையில் காதலுக்கு ஏங்கும் பறவைகள்

இங்ஙணம் வித விதமான பறவைகள் இருந்தாலும்
அங்ஙனமே சகித்து கொள்கிறாய் அனைத்தையும்

ஆபத்து என்றால் அரசாங்கத்தை விட முந்துகிறாய் நீ
விபத்து என்றால் துடித்தும் போகிறாய் நீ

அறுவை சிகிச்சைக்கு உயிர் காக்க உடனடி இரத்தம்
மறுசொல் இல்லாமல் உதவும் உன்னிடம் என்றும் இல்லை வருத்தம்

காக்கும் கடவுளுக்கு உண்டு ஓர் தலவிருச்சம்
எக்காலத்திலும் நீயே எங்களுக்கு அபயமளிக்கும் மாவிருச்சம்

குண்டுசியிலிருந்து கோபுர கலசம்வரை கிடைப்பது எங்கே
குறைவில்லாமல் கூறப்படுகிறது உன் மரக்கிளைகளில் இங்கே

பிரியாணி முதல் பீசா வரை இங்கே ஒரு பாசம்
பிரியமுடனே கூப்பிட்டு அழைக்கும் நேசம்

சமயத்தில் சிறுசு பெருசு என்றில்லாமல் ஒரு நக்கல்
சமய பேதமில்லாமல் நடந்திடுமே ஒரு கலக்கல்

அன்றாடம் எதிர்படும் பிரச்சனைகளின் தீர்வுக்கு
மன்றாடும் மாமன்றம் உன் மரநிழல்

பகைவர்களையும் நேசிக்க வைக்க முடிகிறது உன்னால்
அனைவரையும் அணைத்து கொள்ள முடிகிறது உன்னால்

உன் கிளைகளில் முட்டை இட இயலாதது
பெண் பறவைகள் வரத்து குறைவானது

இந்த கூடல் மாநகரில் கூடி இருக்கும் பறவைகளுக்கு
அந்த எல்லாம் வல்ல இறைவன் வாரி வழங்குவான் அருளை

தனக்கு என்றில்லாமல் இந்த உலகுக்கே நீ சொந்தம்
உனக்கு வித்திட்டவரை வணங்குகிறோம்

சின்னபையன்

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: Twitter   Aalamaram   ட்விட்டர்   ஆலமரம்           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.