|
||||||||
இவ்வாரம் (மார்ச்,01,2025) திருக்குறளின் இரண்டு மொழிபெயர்ப்புகள் சார்ந்த செயல்பாடுகள் தொடங்கியுள்ளது |
||||||||
இவ்வாரம் (மார்ச்,01,2025) திருக்குறளின் இரண்டு மொழிபெயர்ப்புகள் சார்ந்த செயல்பாடுகள் தொடங்கியுள்ளது. 1. மாலத்தீவில் பேசப்படும் தேவகி (Dhivehi ) மொழியில் மொழிபெயர்க்க அங்குள்ள தமிழ்ச்ச்சங்க ஆளுமை திரு.செந்தில்குமார் அவர்கள் உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்பு வழிகாட்டுதல் குழுவின் பேராசிரியர்.முனைவர்.ஜாஹிர் ஹுசைன் அவர்களுடன் இணைந்து குழு உருவாக்கி ஆங்கில-அரபி மொழி நூல்களை அந்நாட்டு மொழிக்குழுவின் பார்வைக்கு அனுப்பி ஒப்புதல் பெற முதல்கட்டமாக உரையாடல் தொடங்கியுள்ளது. முனைவர்.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், திருக்குறளை அரபியில் மொழிபெயர்த்தவர், வளைகுடா நாடுகளில் திருக்குறளில் மதப்பார்வையற்ற அனைவரும் பயன்படுத்தும் வாழ்வியல் கருத்துகள் உள்ளது என்பதை நிறுவியர். 2. எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர்.சுப்பிரமணி அவர்கள் படுகா மொழியில் மொழிபெயர்க்க ஆர்வம் கொண்டு தொடர்புகொண்டார். ஏற்கனவே செம்மொழி ஆய்வு நிறுவனம் இம்மொழிபெயர்ப்பை செய்துள்ள நிலையில் , மற்றொரு மொழிபெயர்ப்பாக படுகா மொழியில் மொழிபெயர்க்க உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்பு வழிகாட்டுதல் குழு உரிய வழிகாட்டுதலை, ஒத்துழைப்பை நல்குகிறது. இன்னும் 126 உலக அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டிய நிலையில் உள்ள திருக்குறளை உங்கள் நாட்டு மொழியில் உரிய பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை , மொழிபெயர்ப்பாளர்களைக்கொண்டு மொழிபெயர்க்க முன்வாருங்கள் என்று உலகத் தமிழர்களை கோருகிறோம். உலகின் வேறு எந்த மொழியிலாவது திருக்குறள் மொழிபெயர்ப்பு நடைபெற்றால் எங்களுக்கு தெரிவிக்கவும். பட்டியலில் சேர்த்து பகிர்வோம்..
உலக மொழிகளில் திருக்குறள் :மொழிபெயர்ப்புத் திட்டக்குழு சார்பாக |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
| by Swathi on 01 Mar 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|