வல்லரசு நாடுகளுள் ஒன்றான அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ராணுவ வீரர்களின் இறுதி சடங்குக்கான நிதியை அனுமதி அளித்து அதிபர் ஒபாமா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபரின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராளமன்றத்தில் போதுமான ஆதரவு கிடைக்காததால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால், சுமார் 8 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள் தற்காலிகமாக வேலை இழந்துள்ளனர். மேலும் இந்த பொருளாதார நெருக்கடி அமெரிக்கா இராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை, கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, அமெரிக்க வீரர்கள், நான்கு பேர், தலிபான்களின் தாக்குதலில், பலியாயினர். இவர்களின் இறுதி சடங்குக்கான நிதியும், போரில் இறந்ததற்கான நிதியும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அரசு கரூவூலத்திலிருந்து இவர்களுக்கு நிதியளிக்க முடியாத காரணத்தால், தனியார் தொண்டு நிறுவனம் மூலம், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், ராணுவ வீரர்களின் இறப்புக்கு அளிக்கப்படும் நிவாரண நிதி ஒப்புதல் மசோதா, அமெரிக்க பாராளமன்றத்தில் நேற்று முன்தினம், நிறைவேற்றப்பட்டது.
|