LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இராசராசன் 1033 ஆவது பிறந்த (சதய) நாள் விழா குடந்தை அருகில் உள்ள உடையாளூரில் நடைபெற்றது.

உடையாளூர் சதய விழா (20. 10. 18):

இராசராசன் 1033 ஆவது பிறந்த (சதய) நாள் விழா குடந்தை அருகில் உள்ள உடையாளூரில் நடைபெற்றது. கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலை தாங்கினார்.

இராசராசன் வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் சு.க.ஸ்ரீதரன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

வரலாற்று ஆய்வாளர் முது முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன், தொல்லியல் துறை முன்னாள் ஆணையர் டி.எஸ். ஸ்ரீதர் இஆப, தொல்லியல் துறை முன்னாள் அதிகாரி கி. ஸ்ரீதர், தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரா . தமிழடியான், திரைப்பட நடிகர், இயக்குநர், கவிஞர் யார் கண்ணன், முன்னாள் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பம்ப் படையூர் சு.கலியாணசுந்தரம் முதலியோர் இராசராச சோழனின் பெருமைகளைப் பற்றி உரையாற்றினர். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறைத் தேர்தல் ஆணையர் முனைவர் மு. இராசேந்திரன் சிறப்புரை ஆற்றினார்.


விழாவிற்குக் கோவை பவானி சுவாமிகள் வந்திருந்து வாழ்த்தியதுடன், தமிழக அரசு அனுமதி அளித்தால் தாமே இராசராசன் புதைஇடத்தில் கோயிலும் மணி மண்டகமும் கட்டித் தருவதாக உறுதி அளித்தார். திருநாவலூர் சுந்தரமூர்த்தி அவர்கள் கோயில் கட்டும் செலவை ஏற்பதாகக் கூறினார்.

கூட்டுறவுத் துறைத் தேர்தல் ஆணையர் முனைவர் மு. இராசேந்திரன் இஆப அவர்களும், தொல்லியல் துறை முன்னாள் ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர் இ .ஆ .ப . அவர்களும் தமிழக அரசிடம் இக்கருத்துருவை முன்வைப்பதாகக் கூறினர். கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், கோயில் கட்டத் தாம் எடுத்த முயற்சிகள் பற்றிக் கூறினார்.

வரலாற்று அறிஞர் குடவாயில் பாலசுப்பிரமணியன், உடையாளூர் தான் இராசராசன் புதை இடம்(சமாதி) உள்ள இடம் என்பதற்குக் கிடைத்துள்ள சான்றுகளையும் கல்வெட்டு ஆய்வுகளையும் விளக்கினார்.

வரலாற்றுப் படக் கண்காட்சியும், தஞ்சாவூர் மாவட்ட சிலம்பாட்டக் குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சத்தியமங்கலம் கவிஞர் திருமதி பவுசியா இக்பால் அவர்களின் மகன் சிலம்பக் கலை நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது. திப்பிராசபுரம் அரசு மேனிலைப் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது, உடையாளூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் யூ எஸ் ஆர் உலகநாதன் நன்றியுரை கூறினார்.

விழாவிற்கு உடையாளூர் பம்பப் படையூர்  இராசராசன் வரலாற்று ஆய்வு மையத்தினரும், சென்னை தமிழ் எழுச்சிப் பேரவையினரும் ஏற்பாடு செய்திருந்தனர்.

சென்னையில் சதய விழா 27 ஆம் தேதி நடைபெறும் எனத் தமிழ் எழுச்சிப் பேரவைச் செயலர் முனைவர் பா .இறையரசன் தெரிவித்தார்.

by Swathi   on 22 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல். இளையராஜா பாடல்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்ட விவகாரம் ; சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்.
முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம். முருகன் கோவிலில் பூஜை செய்யப்பட்ட எலுமிச்சைப் பழங்கள் ரூ.2.36 லட்சத்திற்கு ஏலம்.
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார். நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்.
"உலகத் தமிழ் மாநாடு" - வரலாறு திரும்புமா ?
2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்! 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய செழித்தோங்கிய சமூகத்தின் சுவடுகள்.. கடையம் அகழாய்வில் தகவல்!
செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம். செம்மொழி நிறுவன இணையதளத்தில் சங்க இலக்கிய உரைகள் பதிவேற்றம்.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு! மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு!
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஓராண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.