LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கலைசைக்கோவை

உடன்போக்கு

பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்தல்.
322.
கள்ளார்க் குவதர் சிதம்பர வீசர் கலைசைவெற்பா
வள்ளார்கண் ணாளுட னின்பதிக்கேசென்று வாழ்ந்தருள்வான்
உள்ளா ரிருநிதி யுங்கொடு வந்திங் குதவினுநீ
கொள்ளார் முலைவிலை யாகவெம் மையர் குறையறவே. 1

தலைவன் உடன்போக்கு மறுத்தல்.
323.
சுடர்ப்பாலை வன்னி கமர்வழி போய்வையந் தூக்கிநிற்கும்
விடப்பாந்த ளுச்சி வெதுப்புங் கடத்தில் விமலையைத்தம்
இடப்பாகம் வைத்த கலைசைத் தியாகரை யெண்ணலர்போல்
நடப்பா ரெவர்துணிந் திப்பூங் கொடியுட னன்னுதலே. 2

பாங்கி தலைமகனை உடன்படுத்தல்.
324.
சங்கையி லாவெம் பரலார் முரம்புந் தழற்சுரமும்
செங்கைகொல் வேல சிதம்பர வீசர் திருக்கலைசை
மங்கைய ராடுந் திருநந்தி யோடையு மல்குசிவ
கங்கையுந் தானல்ல வோநின்னொ டேகினெங் காரிகைக்கே. 3

தலைவன் போக்கு உடன்படுதல்.
325.
கோதைத் தவிர்க்குங் கலைசைத் தியாகரைக் கூறலர்போம்
பாதைக் கடுந்தழல் பார்த்துமென் சீறடி பாங்கனிச்சப்
போதைப் பகையென்று கூசுதல் கண்டும் பொலந்தொடியென்
பேதைத் தனிநெஞ் சிவளுடன் கான்செலப் பெட்புற்றதே. 4

பாங்கி தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல்.
326.
தூண்டற் கரிய சுடரனை யாய்பஞ்சிற் றூக்குபதம்
நீண்டக் கினியெரி கான நடந்து நிரைவளையாள்
பாண்டப் பலம்பு கலைசைத் தியாகர் பவனிவிழாக்
காண்டற் குடன்வரு மோவென் றவாவினர் காவலரே. 5

தலைவி நாணழிபிரங்கல்.
327.
தண்ணார் பதங்க மரியயன் றேடியுந் தாமறிய
ஒண்ணாச் சிதம்பர வீசன் கலைசை யுறாரெனவென்
கண்ணா ருயிரென வுற்றநன் னாணங் கழன்றிடலாற்
பெண்ணாச் சமைத்த வினையேபொல் லாத பெருவினையே. 6

கற்பு மேம்பாடு பாங்கி கூறல்.
328.
காணினுங் கேட்கினு மானந்த மாகுங் கலைசையயி
ராணிதன் கேள்வர் சிதம்பர வீச ரருளனையாய்
பேணிய வாவியிற் பெற்றிடுந் தாயிற் பெரிதெனச்சொல்
நாணினு நற்பொருள் கற்பாவ தேயென்று நங்கையர்க்கே. 7

தலைவி ஒருப்பட் டெழுதல்.
329.
பூத வனீகர் சிதம்பர வீசரைப் போற்றிலர்போல்
மாதர் விரோதத்திற் றாயர் குரோதத்தில் வாட்டமுற்ற
யாதனை தீரக் கலைசைக்கெ னன்பரொ டேகுவல்யான்
ஆதலி னின்னமிவ் வூரம்ப றூற்றி யழுங்குகவே. 8

பாங்கி சுரத்தியல் உரைத்துழித் தலைமகள் சொல்லல்.
330.
சசியார் புரிசைக் கலைசைத் தியாகரைச் சார்கிலர்போல்
ஒசியாநிற் குஞ்சிற் றிடையாயென் கூறினை யூரவர்வாய்க்
கசியாச்சொற் றீயிற் கனற்றப்பட் டேற்குக் கடுமை பொங்கும்
சுசியார் வனமும் வனமாஞ் சிவசிவ துன்னிடினே. 9

பாங்கி தலைமகளைத் தலைமகற்குக் கையடை கொடுத்தல்.
331.
ஆனந்தக் கூத்தர் கலைசைத் தியாக ரருமறைபோல்
ஈனந்தங் காமெய்ய னீயென் றிவளை யினிதளித்தேன்
மானந்தங் குன்னரு ளும்பிறி தாயின் மழைசுருங்கித்
தானந் தவமற் றிரண்டுமொன் றாமித் தரையிடத்தே. 10

பாங்கி வைகிருள் விடுத்தல்.
332.
மைவாரு மல்லிற் கலைசைத் தியாகர் வரையணங்கே
இவ்வாண்டகைபின்னர்நீசெல்லுமார்க்கம்வந் தெய்துவல்யான்
அவ்வாத வூரர்முன் றேரர்வெவ் வாயை யடக்கியபோல்
ஒவ்வா வலருரைப் பார்பல வாயு மொடுக்குவித்தே. 11

தலைவியைத் தலைவன் சுரத்துய்த்தல்.
333.
மண்ணிற் சிறந்த கலைசைத் தியாகர் வளர்சடைநீர்த்
தண்ணிற் சிறந்தவெண் பாலாற்று முத்தமுஞ் சாற்றுமவர்
கண்ணிற் கருணைக் கடல்போற் குளிரிளங் காவுங்கண்டு
பெண்ணிற் சிறந்தவண் மெல்லமெல் லப்பதம் பேர்த்துவையே 12

தலைமகன் தலைமகள் அசைவறிந் திருத்தல்.
334.
முச்சோதி யங்கட் கலைசைத் தியாகரை முன்னலர்போல்
அச்சோவுன் செம்பொ னடித்தா மரையி லரம்பொருகற்
றச்சோ திமநடைத் தையலெய்ப் பாயினை சாந்தமுற
இச்சோ லையினிழற் கீழிருப் பாஞ்சற் றிளைப்பறவே. 13

தலைமகன் தலைமகளை உவந்து அலர்சூட்டி
உண்மகிழ்ந் துரைத்தல்.
335.
பாதபத் மங்க ளிவட்கியான் வருடவும் பாலையின்கீழ்ச்
சீதள மாலை திருமுடி சூட்டவுந் தென்கலைசை
நாதனெங் கோனைச் சிதம்பர வீசனை நாடியந்நாள்
மாதவங் கோடிசெய் தன்றோவிப் பேறின்று வாய்த்ததுவே. 14

கண்டோர் அயிர்த்தல்.
336.
நரந்தஞ்ச மாக்கொள் கலைசைத் தியாகர்நன் னாட்டுறையும்
மரந்தர் கொலோவிச் சுரத்திவர் யார்குற வள்ளியென்னின்
பூந்தண் குழலிவள் கையிற்கல் லாரமென் போதில்லையாற்
சேந்தனென் றாலிவன் செம்மார்பில் வெட்சித் தெரியலின்றே. 15

கண்டோர் காதலின் விலக்கல்.
337.
வில்வேளு மந்த விரதியும் போல்வரு வீர்கலைசை
நல்வேத கீதர் சிதம்பர வீசரை நண்ணலர்போல்
கல்வேம்வெங் கானத் தினிச்செல் லொணாது கதிர்மறைந்த
தில்வே றிலையினி யல்வேளை யெம்மி லிருந்துண்ணுமே. 16

கண்டோர் தம்பதி ‍அணிமை சாற்றல்.
338.
இம்மாது நீயுமின் றிம்மா திரங்கடந் தேகினெங்கும்
செம்மாணிக் கச்சுடர் மாடமுங் கூடமுஞ் சேர்கிடங்கும்
அம்மா மதில்களுஞ் சூழ்ந்தெதிர் தோன்று மமரர்க்கெல்லாம்
பெம்மான் சிதம்பர வீசன் கலைசைப் பெருநகரே. 17

தலைவன் தன்பதி அடைந்தமை தலைவிக் குணர்த்தல்.
339.
முதுகா ரணனு மெழுதரி யாயிரு மூன்றுடன்முப்
பதுகா தமுநடந் தேவந் தணைந்தனம் பாற்கரனா
ரதுகா யழல்வெம்மை யுட்புகு தாம லடர்பொழில்சூழ்
இதுகாண் சிதம்பர வீசன் கலைசை யெழினகரே. 18

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.