டாஸ்மாக் காட்சிகள் தற்போது வெளிவரும் பெரும்பாலான படங்களில் தொடர் கதையாகி வரும் நிலையில், இதனை பார்க்கும் ரசிகர்கள் அப்படியே பின்பற்றுவதாக சமூக நல அமைப்புகளிடம் இருந்து புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் உதயநிதி தான் இனி நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்சிகள் இனி கண்டிப்பாக எப்போதும் இடம் பெறாது என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நடிகர்கள் செய்வதை அப்படியே ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள், ஆகையால் சமூகத்திற்கு நான் தவறான முன்னுதாரணமாக இருக்க கூடாது.
எனவே இனி என்னை வைத்து படம் இயக்கும் இயக்குநர்களிடம் இனிமேல் மது அருந்துவது போன்ற காட்சியில் கண்டிப்பாக இனிநடிக்க மாட்டேன் என்பதை தெரிவித்துள்ளேன். அதன்படி இனி நான் நடிக்கும் படங்களில் மது அருந்தும் காட்கிள் இருக்காது என்றார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்துடன் மது அருந்துவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்ததும் ,தற்போது அவர் நடித்து வெளிவந்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி முன் சந்தானம் மது அருந்துவது போல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
|