|
||||||||
உகர வருக்கம் |
||||||||
உடுவெனும் பெயரே யொளிவான் மீனும்
பகழியும் அம்புத் தலையொடு நாவாய்
நடத்திய மரக்கலக் கோலு நவிலுவர். ....242
உத்திர மெனும்பெய ரொருநா ளுடனே
சித்திர மாளிகை சேர்ந்த தோருறுப்பே. ....243
உத்தி யெனும் பெய ருரகப் பொறியுடன்
திருவினு றுப்பொடு நுண்மைப் பொருளுமாம். ....244
உத்திர மெனும்பெயர் மேலும் வடக்கும்
மறுவார்த் தையுமென வழங்கப்பெறுமே. ....245
உலவை யெனும்பெயர் மரத்தின் கோடும்
விலங்கின் மருப்புங் காற்றுந் தழையுமாம். ....246
உந்தி யெனும்பெயர் நீரும்நீர்ச் சுழியும்
தேரின் றட்டும் நாபியும் கடலும்
பெண்கள் விளையாடலு நதியும் பேசுவர். ....247
உப்பெனும் பெயரே மகளிர் விளையாடலும்
கடலும் இனிமையும் கடல்விளையு வருமாம். ....248
உறையெனும் பெயரே நீர்த்துளி முதலாந்
துளியு நீர்நோய் தொலைத்திடு மருந்தும்
பெருமையும் பாலும் பிரையும் விழுமமும்
வெண்கலப் பெயரும் இடைச்சொலு முணவும்
ஊழியுங் காரமும் உவர்நீரு நீளமும்
படையுறை யுடனே நன்னில வூரும்
எண்குறித் திறுதி யெய்வதும் இயம்புவர். ....249
உலகெனும் பெயருயர்ந் தோரும் பூமியும்
திசையு மாகாயமு நாடுஞ் செப்புவர். ....250
உலக்கை யெனும்பெய ரோண நாளு
முரோங்கலு மெனவே யுரைத்தனர் புலவர். ....251
உறுவ னெனும்பெயர் அசோகமர் கடவுளும்
இருடியு மெனவே யியம்பப் பெறுமே. ....252
உறையுள் எனும்பெய ரூரு நாடும்
வீட்டின் பெயரும் விளம்புவர் புலவர். ....253
உயவை யெனும்பெயர் கானை யாறுங்
காக்கணங் கருவிளைப் பெயருங் கருதுவர். ....254
உழையெனும் பெயரே யாழி னரம்பும்
இடமும் மானும் இயம்புவர் புலவர். ....255
உம்பல் எனும்பெயர் விலங்கினாண் பெயருங்
குடிவழித் தோன்றலும் யானையுங் கூறுவர். ....256
உவாவெனும் பெயரினை யோனும் யானையும்
ஈருவா வின்பெயர் தானும் விளம்புவர். ....257
உண்டை யெனும்பெயர் படையின துறுப்பும்
திரண்ட வடிவின் பெயருஞ் செப்புவர். ....258
உளையெனும் பெயரே பரிக்க டிவாளத்
தணிம யிராயவு மஃறிணை மயிரும்
ஆண்பான் மயிரொடு சத்த வொலியுமாம். ....259
உடையெனும் பெயரே செல்வமும் கூறையும்
குடைவேலு முடைமைப் பெயரும் கூறுவர். ....260
உணர்வெனும் பெயரே உளத்தின் தெளிவும்
ஞானமு மெனவே நவிலப் பெறுமே. ....261
உரையெனும் பெயரே சத்த வொலியும்
தேய்தலு மொழியுஞ் செப்புவர் புலவர். ....262
உவளக மெனும்பெயர் மதிலும் பள்ளமும்
ஆய ரூருமோர் பக்கமும் வாவியும். ....263
உயிரெனும் பெயரே சீவனுங் காற்றுமாம். ....264
உறழ்வெனும் பெயரிடை யீடு முவமையும்
புணர்வும் செறிவும் புகலப் பெறுமே. ....265
உருத்த லெனும்பெயர் தோன்றுதல் சினமுமாம். ....266
உக்கம் எனும்பெய ரிடையின் பக்கமும்
விசிறியு மிடபப் பெயரும் விளம்புவர். ....267
உம்ப ரெனும்பெயர் உயர்நில மேடையும்
தேவரும் விசும்பும் செப்பப் பெறுமே. ....268
உரமெனும் பெயரே யூக்கமும் ஞானமும்
பெலமு மருமமும் பேசுவர் புலவர். ....269
உருவெனும் பெயரே நிறமும் வடிவமும்
அட்டையின் பெயரு மாகு மென்ப. ....270
உவப்பெனும் பெயரே யுயரமு மகிழ்ச்சியும். ....271
உறவி யெனும்பெயர் உயிர்நிலைக் களமும்
நீரூற்றும் உறவும் எறும்பும் உணர்த்துவர். ....272
உறுப்பெனும் பெயரே யுடலு மங்கமும்
படையின துறுப்பும் பகர்ந்தனர் புலவர். ....273
உடலெனும் பெயரே யுடம்பும் பொருளுமாம். ....274
உவணம் எனும்பெயர் கழுகும் பருந்துமாம். ....275
உளர்தல் எனும்பெயர் உதறலும் வருடலும். ....276
உள்ள மெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....277
உழப்பெனும் பெயரே வலியு முச்சாகமும். ....278
உள்ள மெனும்பெயர் முயற்சியின் பெயரும்
நெஞ்சின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....279
உறுகண் எனும்பெயர் நோயும் துன்பமும்
மிடியும் பயமும் விளம்பப் பெறுமே. ....280
உஞற்றெனும் பெயரே வழுக்குடன் ஒளிர்ட்சியுந்
தாளாண் மையுமெனச் சாற்றினர் புலவர். ....281
உறதி யெனும்பெயர் கல்வியும் நன்மையும். ....282
உடுவெனும் பெயரே யொளிவான் மீனும் பகழியும் அம்புத் தலையொடு நாவாய் நடத்திய மரக்கலக் கோலு நவிலுவர். ....242
உத்திர மெனும்பெய ரொருநா ளுடனே சித்திர மாளிகை சேர்ந்த தோருறுப்பே. ....243
உத்தி யெனும் பெய ருரகப் பொறியுடன் திருவினு றுப்பொடு நுண்மைப் பொருளுமாம். ....244
உத்திர மெனும்பெயர் மேலும் வடக்கும் மறுவார்த் தையுமென வழங்கப்பெறுமே. ....245
உலவை யெனும்பெயர் மரத்தின் கோடும் விலங்கின் மருப்புங் காற்றுந் தழையுமாம். ....246
உந்தி யெனும்பெயர் நீரும்நீர்ச் சுழியும் தேரின் றட்டும் நாபியும் கடலும் பெண்கள் விளையாடலு நதியும் பேசுவர். ....247
உப்பெனும் பெயரே மகளிர் விளையாடலும் கடலும் இனிமையும் கடல்விளையு வருமாம். ....248
உறையெனும் பெயரே நீர்த்துளி முதலாந் துளியு நீர்நோய் தொலைத்திடு மருந்தும் பெருமையும் பாலும் பிரையும் விழுமமும் வெண்கலப் பெயரும் இடைச்சொலு முணவும் ஊழியுங் காரமும் உவர்நீரு நீளமும் படையுறை யுடனே நன்னில வூரும் எண்குறித் திறுதி யெய்வதும் இயம்புவர். ....249
உலகெனும் பெயருயர்ந் தோரும் பூமியும் திசையு மாகாயமு நாடுஞ் செப்புவர். ....250
உலக்கை யெனும்பெய ரோண நாளு முரோங்கலு மெனவே யுரைத்தனர் புலவர். ....251
உறுவ னெனும்பெயர் அசோகமர் கடவுளும் இருடியு மெனவே யியம்பப் பெறுமே. ....252
உறையுள் எனும்பெய ரூரு நாடும் வீட்டின் பெயரும் விளம்புவர் புலவர். ....253
உயவை யெனும்பெயர் கானை யாறுங் காக்கணங் கருவிளைப் பெயருங் கருதுவர். ....254
உழையெனும் பெயரே யாழி னரம்பும் இடமும் மானும் இயம்புவர் புலவர். ....255
உம்பல் எனும்பெயர் விலங்கினாண் பெயருங் குடிவழித் தோன்றலும் யானையுங் கூறுவர். ....256
உவாவெனும் பெயரினை யோனும் யானையும் ஈருவா வின்பெயர் தானும் விளம்புவர். ....257
உண்டை யெனும்பெயர் படையின துறுப்பும் திரண்ட வடிவின் பெயருஞ் செப்புவர். ....258
உளையெனும் பெயரே பரிக்க டிவாளத் தணிம யிராயவு மஃறிணை மயிரும் ஆண்பான் மயிரொடு சத்த வொலியுமாம். ....259
உடையெனும் பெயரே செல்வமும் கூறையும் குடைவேலு முடைமைப் பெயரும் கூறுவர். ....260
உணர்வெனும் பெயரே உளத்தின் தெளிவும் ஞானமு மெனவே நவிலப் பெறுமே. ....261
உரையெனும் பெயரே சத்த வொலியும் தேய்தலு மொழியுஞ் செப்புவர் புலவர். ....262
உவளக மெனும்பெயர் மதிலும் பள்ளமும் ஆய ரூருமோர் பக்கமும் வாவியும். ....263
உயிரெனும் பெயரே சீவனுங் காற்றுமாம். ....264
உறழ்வெனும் பெயரிடை யீடு முவமையும் புணர்வும் செறிவும் புகலப் பெறுமே. ....265
உருத்த லெனும்பெயர் தோன்றுதல் சினமுமாம். ....266
உக்கம் எனும்பெய ரிடையின் பக்கமும் விசிறியு மிடபப் பெயரும் விளம்புவர். ....267
உம்ப ரெனும்பெயர் உயர்நில மேடையும் தேவரும் விசும்பும் செப்பப் பெறுமே. ....268
உரமெனும் பெயரே யூக்கமும் ஞானமும் பெலமு மருமமும் பேசுவர் புலவர். ....269
உருவெனும் பெயரே நிறமும் வடிவமும் அட்டையின் பெயரு மாகு மென்ப. ....270
உவப்பெனும் பெயரே யுயரமு மகிழ்ச்சியும். ....271
உறவி யெனும்பெயர் உயிர்நிலைக் களமும் நீரூற்றும் உறவும் எறும்பும் உணர்த்துவர். ....272
உறுப்பெனும் பெயரே யுடலு மங்கமும் படையின துறுப்பும் பகர்ந்தனர் புலவர். ....273
உடலெனும் பெயரே யுடம்பும் பொருளுமாம். ....274
உவணம் எனும்பெயர் கழுகும் பருந்துமாம். ....275
உளர்தல் எனும்பெயர் உதறலும் வருடலும். ....276
உள்ள மெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....277
உழப்பெனும் பெயரே வலியு முச்சாகமும். ....278
உள்ள மெனும்பெயர் முயற்சியின் பெயரும் நெஞ்சின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....279
உறுகண் எனும்பெயர் நோயும் துன்பமும் மிடியும் பயமும் விளம்பப் பெறுமே. ....280
உஞற்றெனும் பெயரே வழுக்குடன் ஒளிர்ட்சியுந் தாளாண் மையுமெனச் சாற்றினர் புலவர். ....281
உறதி யெனும்பெயர் கல்வியும் நன்மையும். ....282
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|