LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

உகர வருக்கம்

 

உடுவெனும் பெயரே யொளிவான் மீனும்
பகழியும் அம்புத் தலையொடு நாவாய்
நடத்திய மரக்கலக் கோலு நவிலுவர். ....242
உத்திர மெனும்பெய ரொருநா ளுடனே
சித்திர மாளிகை சேர்ந்த தோருறுப்பே. ....243
உத்தி யெனும் பெய ருரகப் பொறியுடன்
திருவினு றுப்பொடு நுண்மைப் பொருளுமாம். ....244
உத்திர மெனும்பெயர் மேலும் வடக்கும்
மறுவார்த் தையுமென வழங்கப்பெறுமே. ....245
உலவை யெனும்பெயர் மரத்தின் கோடும்
விலங்கின் மருப்புங் காற்றுந் தழையுமாம். ....246
உந்தி யெனும்பெயர் நீரும்நீர்ச் சுழியும்
தேரின் றட்டும் நாபியும் கடலும்
பெண்கள் விளையாடலு நதியும் பேசுவர். ....247
உப்பெனும் பெயரே மகளிர் விளையாடலும்
கடலும் இனிமையும் கடல்விளையு வருமாம். ....248
உறையெனும் பெயரே நீர்த்துளி முதலாந்
துளியு நீர்நோய் தொலைத்திடு மருந்தும்
பெருமையும் பாலும் பிரையும் விழுமமும்
வெண்கலப் பெயரும் இடைச்சொலு முணவும்
ஊழியுங் காரமும் உவர்நீரு நீளமும்
படையுறை யுடனே நன்னில வூரும்
எண்குறித் திறுதி யெய்வதும் இயம்புவர். ....249
உலகெனும் பெயருயர்ந் தோரும் பூமியும்
திசையு மாகாயமு நாடுஞ் செப்புவர். ....250
உலக்கை யெனும்பெய ரோண நாளு
முரோங்கலு மெனவே யுரைத்தனர் புலவர். ....251
உறுவ னெனும்பெயர் அசோகமர் கடவுளும்
இருடியு மெனவே யியம்பப் பெறுமே. ....252
உறையுள் எனும்பெய ரூரு நாடும்
வீட்டின் பெயரும் விளம்புவர் புலவர். ....253
உயவை யெனும்பெயர் கானை யாறுங்
காக்கணங் கருவிளைப் பெயருங் கருதுவர். ....254
உழையெனும் பெயரே யாழி னரம்பும்
இடமும் மானும் இயம்புவர் புலவர். ....255
உம்பல் எனும்பெயர் விலங்கினாண் பெயருங்
குடிவழித் தோன்றலும் யானையுங் கூறுவர். ....256
உவாவெனும் பெயரினை யோனும் யானையும்
ஈருவா வின்பெயர் தானும் விளம்புவர். ....257
உண்டை யெனும்பெயர் படையின துறுப்பும்
திரண்ட வடிவின் பெயருஞ் செப்புவர். ....258
உளையெனும் பெயரே பரிக்க டிவாளத்
தணிம யிராயவு மஃறிணை மயிரும்
ஆண்பான் மயிரொடு சத்த வொலியுமாம். ....259
உடையெனும் பெயரே செல்வமும் கூறையும்
குடைவேலு முடைமைப் பெயரும் கூறுவர். ....260
உணர்வெனும் பெயரே உளத்தின் தெளிவும்
ஞானமு மெனவே நவிலப் பெறுமே. ....261
உரையெனும் பெயரே சத்த வொலியும்
தேய்தலு மொழியுஞ் செப்புவர் புலவர். ....262
உவளக மெனும்பெயர் மதிலும் பள்ளமும்
ஆய ரூருமோர் பக்கமும் வாவியும். ....263
உயிரெனும் பெயரே சீவனுங் காற்றுமாம். ....264
உறழ்வெனும் பெயரிடை யீடு முவமையும்
புணர்வும் செறிவும் புகலப் பெறுமே. ....265
உருத்த லெனும்பெயர் தோன்றுதல் சினமுமாம். ....266
உக்கம் எனும்பெய ரிடையின் பக்கமும்
விசிறியு மிடபப் பெயரும் விளம்புவர். ....267
உம்ப ரெனும்பெயர் உயர்நில மேடையும்
தேவரும் விசும்பும் செப்பப் பெறுமே. ....268
உரமெனும் பெயரே யூக்கமும் ஞானமும்
பெலமு மருமமும் பேசுவர் புலவர். ....269
உருவெனும் பெயரே நிறமும் வடிவமும்
அட்டையின் பெயரு மாகு மென்ப. ....270
உவப்பெனும் பெயரே யுயரமு மகிழ்ச்சியும். ....271
உறவி யெனும்பெயர் உயிர்நிலைக் களமும்
நீரூற்றும் உறவும் எறும்பும் உணர்த்துவர். ....272
உறுப்பெனும் பெயரே யுடலு மங்கமும்
படையின துறுப்பும் பகர்ந்தனர் புலவர். ....273
உடலெனும் பெயரே யுடம்பும் பொருளுமாம். ....274
உவணம் எனும்பெயர் கழுகும் பருந்துமாம். ....275
உளர்தல் எனும்பெயர் உதறலும் வருடலும். ....276
உள்ள மெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....277
உழப்பெனும் பெயரே வலியு முச்சாகமும். ....278
உள்ள மெனும்பெயர் முயற்சியின் பெயரும்
நெஞ்சின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....279
உறுகண் எனும்பெயர் நோயும் துன்பமும்
மிடியும் பயமும் விளம்பப் பெறுமே. ....280
உஞற்றெனும் பெயரே வழுக்குடன் ஒளிர்ட்சியுந்
தாளாண் மையுமெனச் சாற்றினர் புலவர். ....281
உறதி யெனும்பெயர் கல்வியும் நன்மையும். ....282

 

உடுவெனும் பெயரே யொளிவான் மீனும்

பகழியும் அம்புத் தலையொடு நாவாய்

நடத்திய மரக்கலக் கோலு நவிலுவர். ....242

 

உத்திர மெனும்பெய ரொருநா ளுடனே

சித்திர மாளிகை சேர்ந்த தோருறுப்பே. ....243

 

உத்தி யெனும் பெய ருரகப் பொறியுடன்

திருவினு றுப்பொடு நுண்மைப் பொருளுமாம். ....244

 

உத்திர மெனும்பெயர் மேலும் வடக்கும்

மறுவார்த் தையுமென வழங்கப்பெறுமே. ....245

 

உலவை யெனும்பெயர் மரத்தின் கோடும்

விலங்கின் மருப்புங் காற்றுந் தழையுமாம். ....246

 

உந்தி யெனும்பெயர் நீரும்நீர்ச் சுழியும்

தேரின் றட்டும் நாபியும் கடலும்

பெண்கள் விளையாடலு நதியும் பேசுவர். ....247

 

உப்பெனும் பெயரே மகளிர் விளையாடலும்

கடலும் இனிமையும் கடல்விளையு வருமாம். ....248

 

உறையெனும் பெயரே நீர்த்துளி முதலாந்

துளியு நீர்நோய் தொலைத்திடு மருந்தும்

பெருமையும் பாலும் பிரையும் விழுமமும்

வெண்கலப் பெயரும் இடைச்சொலு முணவும்

ஊழியுங் காரமும் உவர்நீரு நீளமும்

படையுறை யுடனே நன்னில வூரும்

எண்குறித் திறுதி யெய்வதும் இயம்புவர். ....249

 

உலகெனும் பெயருயர்ந் தோரும் பூமியும்

திசையு மாகாயமு நாடுஞ் செப்புவர். ....250

 

உலக்கை யெனும்பெய ரோண நாளு

முரோங்கலு மெனவே யுரைத்தனர் புலவர். ....251

 

உறுவ னெனும்பெயர் அசோகமர் கடவுளும்

இருடியு மெனவே யியம்பப் பெறுமே. ....252

 

உறையுள் எனும்பெய ரூரு நாடும்

வீட்டின் பெயரும் விளம்புவர் புலவர். ....253

 

உயவை யெனும்பெயர் கானை யாறுங்

காக்கணங் கருவிளைப் பெயருங் கருதுவர். ....254

 

உழையெனும் பெயரே யாழி னரம்பும்

இடமும் மானும் இயம்புவர் புலவர். ....255

 

உம்பல் எனும்பெயர் விலங்கினாண் பெயருங்

குடிவழித் தோன்றலும் யானையுங் கூறுவர். ....256

 

உவாவெனும் பெயரினை யோனும் யானையும்

ஈருவா வின்பெயர் தானும் விளம்புவர். ....257

 

உண்டை யெனும்பெயர் படையின துறுப்பும்

திரண்ட வடிவின் பெயருஞ் செப்புவர். ....258

 

உளையெனும் பெயரே பரிக்க டிவாளத்

தணிம யிராயவு மஃறிணை மயிரும்

ஆண்பான் மயிரொடு சத்த வொலியுமாம். ....259

 

உடையெனும் பெயரே செல்வமும் கூறையும்

குடைவேலு முடைமைப் பெயரும் கூறுவர். ....260

 

உணர்வெனும் பெயரே உளத்தின் தெளிவும்

ஞானமு மெனவே நவிலப் பெறுமே. ....261

 

உரையெனும் பெயரே சத்த வொலியும்

தேய்தலு மொழியுஞ் செப்புவர் புலவர். ....262

 

உவளக மெனும்பெயர் மதிலும் பள்ளமும்

ஆய ரூருமோர் பக்கமும் வாவியும். ....263

 

உயிரெனும் பெயரே சீவனுங் காற்றுமாம். ....264

 

உறழ்வெனும் பெயரிடை யீடு முவமையும்

புணர்வும் செறிவும் புகலப் பெறுமே. ....265

 

உருத்த லெனும்பெயர் தோன்றுதல் சினமுமாம். ....266

 

உக்கம் எனும்பெய ரிடையின் பக்கமும்

விசிறியு மிடபப் பெயரும் விளம்புவர். ....267

 

உம்ப ரெனும்பெயர் உயர்நில மேடையும்

தேவரும் விசும்பும் செப்பப் பெறுமே. ....268

 

உரமெனும் பெயரே யூக்கமும் ஞானமும்

பெலமு மருமமும் பேசுவர் புலவர். ....269

 

உருவெனும் பெயரே நிறமும் வடிவமும்

அட்டையின் பெயரு மாகு மென்ப. ....270

 

உவப்பெனும் பெயரே யுயரமு மகிழ்ச்சியும். ....271

 

உறவி யெனும்பெயர் உயிர்நிலைக் களமும்

நீரூற்றும் உறவும் எறும்பும் உணர்த்துவர். ....272

 

உறுப்பெனும் பெயரே யுடலு மங்கமும்

படையின துறுப்பும் பகர்ந்தனர் புலவர். ....273

 

உடலெனும் பெயரே யுடம்பும் பொருளுமாம். ....274

 

உவணம் எனும்பெயர் கழுகும் பருந்துமாம். ....275

 

உளர்தல் எனும்பெயர் உதறலும் வருடலும். ....276

 

உள்ள மெனும்பெயர் நெஞ்சமு நினைவுமாம். ....277

 

உழப்பெனும் பெயரே வலியு முச்சாகமும். ....278

 

உள்ள மெனும்பெயர் முயற்சியின் பெயரும்

நெஞ்சின் பெயரு நிகழ்த்துவர் புலவர். ....279

 

உறுகண் எனும்பெயர் நோயும் துன்பமும்

மிடியும் பயமும் விளம்பப் பெறுமே. ....280

 

உஞற்றெனும் பெயரே வழுக்குடன் ஒளிர்ட்சியுந்

தாளாண் மையுமெனச் சாற்றினர் புலவர். ....281

 

உறதி யெனும்பெயர் கல்வியும் நன்மையும். ....282

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.