இங்கிலாந்தில் தற்போது வெயில் காலம் வாட்டிவதைப்பதால் கடந்த ஒன்பது நாளில் மட்டும் சுமார், 650 பலியாகியுள்ளனர்.
இங்கிலாந்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பலர், வீடிற்குள்ளேயும், நீர்நிலைகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகபட்சமாக வாட்டர் லூ, கென்ட், ஹாம்டன் உள்ளிட்ட பல பகுதிகளில், 102 டிகிரி அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுவரை வெயிலின் தாக்கத்திற்கு சுமார் 650க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
|