LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1184 - கற்பியல்

Next Kural >

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது. (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.)
மணக்குடவர் உரை:
யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே, இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன். இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(காதலர் தெளிவித்த சொற்களையும் அவர் நற்றிறங்களையும் அறிதியாதலின் அவர் வரும்வரை ஆற்றியிரு என்ற தோழிக்குச் சொல்லியது.) . யான் மன் உள்ளுவன்- காதலர் சொற்களை யான் மிகுதியும் நினைப்பேன்; உரைப்பது அவர் திறம்-யாரிடத்திலும் சொல்லுவதும் அவர் நற்றிறங்களையே; பசப்புக் கள்ளம்-அங்ஙனமிருந்தும் எப்படியோ இப்பசலை கள்ளத்தனமாக வந்துள்ளது. முக்கரணங்களுள் மெய் ஏனையிரண்டின் வழிப்பட்டதாகலின், நினைவு சொல் வழியாக வராது நேரே மெய்வழியாக வந்தது மாயமாயுள்ளது என்பதாம்.'ஆல்,' 'பிற,' 'ஓ' அசைநிலைகள்.
கலைஞர் உரை:
யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?.
சாலமன் பாப்பையா உரை:
நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?.
Translation
I meditate his words, his worth is theme of all I say, This sickly hue is false that would my trust betray.
Explanation
I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.
Transliteration
Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal Kallam Piravo Pasappu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >