ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19ம் தேதியை உலக கழிப்பறை தினமாக அனுசரிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.
உலகில் 250 கோடி மக்கள் கழிப்பறை சுகாதாரம் குறித்த விஷயத்தில் அக்கறை இல்லாமல் உள்ளனர். 110 கோடி மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் சுகாதார குறைப்பாட்டினால் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நவம்பர் 19ம் தேதியை உலக கழிப்பறை தினமாக அனுசரிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.
|