சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டுக்கு அகதிகளாக சென்ற, இலங்கை தமிழர்கள் உட்பட 46 பேரை அந்த நாட்டு அரசு கைது செய்து, தனி அறையில் அடைத்து சித்திரவதை செய்வதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஐ.நா. மனித உரிமை குழுவிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த, ஐ.நா. மனித உரிமை குழு, அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் என்ற வகையில், இந்தக் குழுவினர் ஆஸ்திரேலியாவில் தங்கி இருக்க உரிமை உண்டு. இவர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ஆஸ்திரேலியா கருதுகிறது. இருப்பினும் அவர்களை விடுவிப்பதுடன், இழப்பீடும் அளிக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைக்குழு கூறி உள்ளது.
|