LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

உணவா? உணர்வா?

ஒரு கூட்டத்தில் கூடியிருந்தவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது . பூக்களிலே சிறந்த பூ எது ? சிலர் ரோஜா என்றார்கள் . சிலர் தாமரை என்றார்கள் . இன்னும் சிலர் மல்லிகை என்றார்கள் . இப்படி பலரும் பல பூக்களைச்சொல்ல ஒருவர் மட்டும் பருத்திப்பூ என்றார் . அந்தப்பூ அழகாய் இல்லையே . அதை ஏன் சொல்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் அழகை மட்டும் பார்த்து முடிவு எடுக்கக் கூடாது . பயன்பாட்டையும் பார்க்க வேண்டும் . இந்தப் பூ பருத்தியாகி பஞ்சாகி , நூலாகி , ஆடையாகி அனைவரின் மானத்தையும் காப்பாற்றுகிறதே என்றார் . இதே உணர்வுடையவர்தான் பெருந்தலைவர் காமராசர் .

ஒருமுறை மத்திய அரசுக்கு , தமிழக அரசு , சென்னைத் துறைமுகத்தை விரிவு படுத்தும்திட்டம் பற்றிக் கடிதம் எழுதிக் கேட்டது , “ கோட்டைக்கு எதிரே துறைமுக விஸ்தரிப்பு செய்தால் சென்னையின் அழகு கெட்டு விடும் . ஆகவே ராயபுரம் பகுதியில் விஸ்தரிக்கலாம் ” என்று ஒரு அமைச்சர் சிபாரிசு செய்தார் . அதற்கு மத்திய அரசு “ பாறைகள் நிறைந்துள்ள பகுதியில் விஸ்தரிப்பு செய்ய இயலாது . ஆகவே உங்களுக்கு வேண்டியது உணவா ? அழகா ? (Do you want bread or beauty) ” என்று கேட்டது . உடனே காமராசர் “ எனக்கு அழகை விட உணவுதான் தேவை (I want bread rather than beauty) ” என்று எழுதினார் . காமராசர் அன்று அவ்வாறு எழுதியதன் பலன்தான் விரிவு படுத்தப்பட்ட துறைமுகத்தை இன்று காண முடிகிறது .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.