LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    ஹெல்த் டிப்ஸ் -(Health Tips) Print Friendly and PDF

உணவே மருந்து

 நோய் மெலிந்த உடல் கொண்ட நபர்களுக்கு வராது ...

 உடல் பருமன் உள்ளவர்களுக்கே எல்லா நோய்களும்  வரும்  

நீரிழிவு நோய் மற்றும் இரத்தக்கொதிப்பு உள்ளவர்க்ளுக்கு மட்டுமே மாரைடப்பு மற்றும் பக்கவாதம்போல் கொடிய நோய்கள் வருவதர்க்கு வாய்ப்புண்டு

புகைப்பிடிப்பவர்கள் மற்றும் மதுபானங்கள் அருந்தும் நபர்களுக்கு மட்டுமே இருதய நோய் வரும் …..என்ற எண்ணங்கள்   உங்கள் மனதில் எப்போதாவது தோன்றியதுண்டா ?

மேலே கூறபப்படுவதற்கு எதிராக... நீரழிவு நோய் மற்றும் இரத்தக்கொதிப்பு நோய் இல்லாதவர்கள் , உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள்  மற்றும்  உடல் பருமன் இல்லாதவர்கள் ...புகைப்பிடிக்காதவர்கள்  . மது அருந்தாதவர்கள்  இப்படி ஏற்கனவே உடல் நலம் கொண்டவர்களின் இருதயத்திலும் நோய் வருவதற்கு பல கரணங்கள் உள்ளன என்றும் , 21 வயதுள்ள நபருக்கும் மாரடைப்பு வந்துள்ளன என்றும்  மருத்துவ  வரலாற்றில் சொல்லப்படுகிறது என்று நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்.

இது காரணத்தால் , நம் உடலில் உள்பகுதியில் என்னெல்லாம் நடக்கிறது..தினசரி வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள்..நம்மைச்  சுற்றி இருக்கும்  சூழ்நிலைகள் ..நம் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள்  மற்றும் அருந்தும் பானங்கள் ..நம் வாழ்கை வழிமுறைகள் ( Life Style ) ஏன் ..நம் சுவாசிக்கும் காற்று அனைத்தும் நம் உடல் உறுப்புகளில் அணுக்களுக்குள் என்னென்ன மாற்றங்களை செய்வதென்றும் ..இதன் பின்விளைவுகள் என்னவென்றும்... மருத்துவ நிபுணர்கள்  பல அதி  நவீன ஆராய்ச்சிகளை மேற்கொண்டு... ஓரளவில் நல்ல வாழ்கை முறையுள்ளவர்களுக்கும் எதனால் உடலில் வியாதிகள் வருகிறது ..எப்படி இருதய நோய் வருகிறது என்றும்   உண்மைகளைக்  கண்டுப்பிடித்து எந்த  முறையில் அதையெல்லாம் தடுக்க முடியுமென்றும் சில வழிமுறைகள்  நவீன மருத்துவ உலகத்தில் பிரபலமாகி வருவது என்று  நாம் அறிந்துக்கொள்ள வேண்டும் .

இந்த மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் .  நம் இரத்தத்தில் இயற்கையாகவே  உள்ள உணவு சம்பத்தப்பட்ட சிலப் பொருட்கள்  , இரத்தகுழாய் உள்பக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி , இதனால் அந்த இரத்தகுழாய்  பழுதாகி அதில் அடைப்புகள் வருவதன்று மருத்துவர்களுக்கு தெரிய வந்துள்ளது .

1. லைப்போ புரோட்டீன் A ( Lipoprotein A )

இது புரதச்  சத்தும் கொழுப்புச் சத்தும் கலந்த ,  அனைவோரின் இரத்தத்தில் உள்ள   உணவுப் பொருட்களால் உருவாக்கப் பட்ட ஒரு  சத்து .  அனால் இந்த லைப்போ ப்ரோட்டீன்  A  இரத்தத்தில்  ஓர் அளவோடு இருக்க வேண்டும் .


எப்போது  இரத்தத்தில் இந்தப் பொருள் அளவுக்கு மீறி இருக்கிறதோ  அப்போது இரத்தகுழாய் உள்பக்கத்தில்  ( Inner Wall of blood vessels ) மாற்றங்களை ஏற்படுத்தி அடைப்புகளை உண்டாக்குவதர்க்கு வாய்ப்புகள் அதிகமாகிவிடும் ,


இந்த உபாதைகள்  நீரிழிவு நோய் மற்றும் இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்களுக்கும் , புகைப் பிடிப்பவர்களுக்கும் பல மடங்கு உண்டாகும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


ஆகையால் உங்கள் உடலில் இந்த லைப்போ ப்ரோட்டீன் A கூடுதலாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.


2. B12 , B6  மற்றும் போலேட் ( Folate )  வைட்டமின் சத்துக்கள் குறைவு

தினசரி உணவுப் பொருட்களில் எனக்கு போதுமான வைட்டமின் சத்துக்கள் கிடைக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம் .

ஆனல் நீங்கள் உட்கொள்ளும் அந்த உணவுப் பொருட்கள் எல்லாம் எங்கே உற்பத்தியாகிறது .. அதை எப்படி உற்பத்தி செய்கிறார்கள் , அதன் செய்முறைகளில் ஏதேனும் தவறுகள் உள்ளனவா ..அதில் நச்சுப் பொருட்கள் ஏதேனும் கலக்கப் படுவதற்கு வாய்ப்புகள் இருக்குமா ...என்று யாராலும் சொல்ல முடியாத விஷயம்.

ஆகவே மேலே சொல்லப்படும் வைட்டமின் சத்துக்கள் உங்கள் இரத்தத்தில் போதுமான அளவில் உள்ளதா என்றும் தெரிய வேண்டும்.


எதற்கு இந்த வைட்டமின் என்று சிலர் கேட்கலாம் ,


3. ஹாமோசிஸ்டின் ( Homocysteine )


நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களிலுள்ள  புரதச் சத்து  இரத்தத்தில் முறிவடைந்து அவையெல்லாம் அமினோ ஆசிட்டாக மாறும் ( Amino Acids ) இந்த அமினோ ஆசிட்களில் ஒன்றுதான் ஹாமோசிஸ்டின்.


இந்த ஹாமோசிஸ்டின் நம் இரத்தத்தில் ( Methionine ) மிடையோனின் ஆக மாற்றப்பட வேண்டும் , இந்த மாற்றம் தினசரி நடக்க வேண்டும், இல்லாவிட்டால் இந்த ஹாமோசிஸ்டின் நம் இரத்தத்தில் கூடுதலாகிவிடும்.


அளவுக்கு மீறிநாள் ஹாமோசிஸ்டின்  பக்கவாதம் மற்றும் ருதய நோய்க்கு ஒரு பெரியக்  காரணமக இருக்கலாம்  என்று மருத்துவ ஆராய்ச்சி  மூலம் தெரிந்துக் கொண்டார்களாம் .


இந்த மாற்றத்திற்கு  அத்தியாவசியமானப்  பொருள்தான் வைட்டமின் பி 12 ( VITAMIN B12 )  . இப்படித்தான் வைட்டமின் பி 12 என்ற  இந்தச் சிறிய உணவுப் பொருள் எவ்வளவு அவசியம் என்று நம் அறிந்துக்கொண்டு   ,  நம் இரத்தத்தில் வைட்டமின் பி 12 போதுமான அளவுக்கு உள்ளதா என்றும் பார்த்துக்கொள்ள வேண்டும்


4. இரத்தத்தில் கூடுதல் சர்க்கரை அளவு =  ஹைப்பர்கிளைசீமியா ( Hyperglycemia )


பெரும்பாலும் உலகத்திலுள்ள இந்தியர்களின் உணவுப்பொட்களிருந்து சர்க்கரையை நீக்க முடியுமா ??

கூடுதல்   சர்க்கரை அளவு  ( ஹைப்பர்கிளைசீமியா ) எப்படி வருவது என்றால்   சீனி ( Sugar  ) உட்கொள்ளும் காரணமாக  மட்டுமல்ல , நம் உட்கொள்ளும் சாதம் , மைதா ,  பல குளிர்பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களிலேயே நிறைய க்ளுகோஸ்   ( Glucose ) உள்ளன


இந்த   கூடுதல்   சர்க்கரை அளவு  ( ஹைப்பர்கிளைசீமியா  ) இரத்தக்குழாய்களின் உள்ப்பகுதியில் ( INNER WALL  )  சிருக்காயங்களை உண்டாக்கி அதநால் குழாய் உள்ப்பகுதி சேதமடைந்து அந்தந்த இடங்களில் ஓரளவுக்கு இருக்கின்ற கொழுப்புச்  சத்துக்கள்   மற்ற பொருட்களுடன்  சேர்ந்து குழாய்களில் ஒட்டிக்கொண்டு  அடைப்புகளயை உருவாக்குகின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது .


ஆகையால்தான் முடிந்த அளவில்  இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதல் இல்லாமல் நம் பார்துகொள்ளவேண்டும் , அதிலும் நீரிழிவு

 நோயுள்ளவர்கள் இன்னும் கவனமாக இருத்தல் வேண்டும்.


5. இரத்தத்தில் நச்ச்சுப்பொருள் ( பிரி ரேடிக்கல்ஸ்  FREE RADICALS  )

நாம் சுவாசித்த ஆக்சிஜன் எவ்வளவு சுத்தமானதாக இருந்தாலும் . உடல் அணுக்களுக்குள் போய்ச் சேருவதர்க்கு முன்னே அது நம் இரத்தத்தில் உள்ள  பல பல ரசாயனப் பொருள்களுடன் கலக்கப்படுகிறது .

இந்த சகுனத்தில் சிங்கிள் ஆட்டம் ஆக்சிஜன் ( SINGLE ATOM OXYGEN )  ஒன்று உருவாகி , அது நம் உடலிலுள்ள அணுக்கள் மீது ஒரு நச்சுப் பொருளாக  உட்கார்ந்து விடும்.

இதற்க்குப்  பெயர்தான் பிரி ரேடிக்கல்ஸ் FREE RADICALS .

நச்சுப்  பொருள் மூடிக்கொண்டிருக்கும் உடல் அணுக்களுக்குள் வேறொரு உணவுச்  சத்துப்  பொருளோ ,  வைட்டமினோ , மருந்தோ , ஏதும் உள்ளே செல்ல முடியாது .

அத்தகைய உடல் அணுக்கள் சேதமடைந்து,   சேதமடைந்த அவைகள் அனைத்தும்  FREE RADICALS ஆக மாறிவிடுமாம் . இந்த அணுக்கள் சேதமடைய , உடல் உறுப்புகளை சேதமடையுமல்லவா ..


தினசரி உட்கொள்ளும் உணவுகள் குடிக்கும் பானங்கள் உடலில் பூசிக்கொள்ளும் வாசனைப்பொருள்கள் ஏர்க்  கண்டிஷன் ,  வெகுதூரப்   பிரயாணங்கள் , அடிக்கடி விமானப் பயணம் , புகைப் பிடித்தல் , புகைப் பிடிக்கும்  சுற்றுவட்டார இடங்களில்  சுவாசிப்பது, கூடுதல் மது அருந்துதல் , இப்படி வாழ்க்கையில் தினசரி நடக்கும் அணைத்து விஷயத்திலும் எங்கேயாவது இந்த  FREE RADICALS எனக் சொல்லப்படும் நச்சுப் பொருளை யாராலும் எங்கே வேணுமானாலும் தவிர்க்கவே முடியாது என்று எல்லா மருத்துவப் புத்தகங்களில் சொல்லப்படுகிறது.


 தினசரி வாழ்க்கையிலேயே இவ்வளவு நச்சுப் பொருள் இருக்குமேயானால்  எப்படித்தான் ஆரோக்கியத்துடன் நாம்  வாழ்வது ?

மேலே கூறியுள்ள அத்தனை விஷயமும் நம் தினசரி வாழ்க்கையில் நடக்கின்றதே .. இதை எப்படி கையாளுகிறது ?

இதைப்பற்றி மருத்துவ உலகத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்த்துள்ளனர் , இந்த நச்சுப் பொருளை நடுநிலைப் படுத்துவதற்க்காகவும் ( TO NEUTRALIZE ) பல பல வழிகளை வகுத்தார்கள் மருத்துவ வல்லுநர்கள், இதில் ஒன்றுதான் ஆன்டி ஆக்சிடன்ட் (.ANTI OXIDANT .) எனக்  கூறப்படும் ஒரு சத்து.


இந்த ஆன்டி ஆக்சிடன்ட் (.ANTI OXIDANT.) நம்முடைய உடல் அணுக்களுக்கு மேலே இருக்கும் பிரி ரேடிக்கல்ஸ்களை நகர்த்தி(  FREE RADICALS ) உடல் அணுக்களை சுத்தம் செய்தும், மற்றும் இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருள்களையும் நீக்கிவிட்டு , உடல் ஆரோக்கியத்தை தந்துவிடுமென்று ஆதாரங்கள் உள்ளன


ஆன்டி ஆக்சிடன்ட் (.ANTI OXIDANT.) … இது  எங்கேக் கிடைக்குமென்று அனைவரும் கேட்பீர்கள் .

இதுவும் நம் தினசரி உட்கொள்ளும் உணவுப் பொருள்களில்த்தான் இருக்கின்றன

காய்கறிகள் பழவகைகள் அனைத்திலும் இந்தச் சத்துபொருள் நிறைய உள்ளது , அனால் இந்த நவீன உலகத்தில் வாழும் நிறையப் பேர்கள் கூடுமான  அளவுக்கு காய்கறிகள் மற்றும் பழவகைகளை உட்கொள்ளவில்லை  என்பதும் நாம் அறிந்ததே ,


 “  நான் சுத்த சைவமானவன், தினமும் காய்கறிகள் மற்றும் பழவகைகள் சாப்பிடுகிறேன்”  என்று  சிலர் கூறலாம் .

உண்மை தான், ஆனாலும் நீங்கள் உட்கொள்ளும் அந்தக் காய்கறி மற்றும்  பழவகைகள் யாவும் எங்கே -  எப்படி - எந்த முறையில் பயிரிடப்பட்டு , என்னென்னப் பொருட்களையெல்லாம்  உரங்களாக உபயோகிக்கிறார்கள் , அதில் ரசாயனப் பொருள்கள் ஏதேனும் உள்ளதா ...என்று யாருக்காவது தெரியுமா ?


தினமும் சுத்தமான உணவு வகைகளை உட்கொள்ளும் நபருக்கும் இந்த நச்சுப்பொருட்களால் உருவாகின்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது என்று மருத்துவ உலகம் கண்டறிந்தது .


ஆகையால் சுத்தமான உணவுவகைளிலும் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான வைட்டமின்கள் கூடுமான அளவில் இல்லை என்றும் அடிப்படையில் தான் வைட்டமின் ( VITAMINS ) சத்துக்களை தினமும் உட்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகள் கூறப்படுகிறது

VITAMIN C  , B1 B6 , B12 இந்த வைட்டமின்களில் நிறைய ஆன்டி ஆக்சிடன்ட் இருக்கிறது

இதை கண்டிப்பாக அனைவரும் தினசரி உட்கொண்டுமேயானால் , நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை நீக்கி உடல் அணுக்களையும் இரத்தத்தையும் சுத்தகரித்து உடல் உறுப்புகளை காப்பாற்றி ஆரோக்கியத்தை தரும்.


நோய்னாடி நோய் முதல்நாடி

அதுதணிக்கும் வாயநாடி வாய்ப்பச் செயல் .


மரு . குருசாமி அசோகன் ,

0877 8881 9452

wellnessdoctorjkt@gmail.com


 PS:
எழுத்துப் பிழைகள் இருக்கும்,
மண்ணிக்கவும்
ஏனனில் நான் முறையாக தமிழ் படிக்காதவன்..

எழுத்துப் பிழைகள் இருக்கும்,மண்ணிக்கவும் ஏனனில் நான் முறையாக தமிழ் படிக்காதவன்..




WHY DO WE NEED VITAMINS
 
   
by Dr GURUSAMY ASOGAN, MBBS.,FCGP ( India )   on 20 Oct 2018  0 Comments

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா? முருங்கை இலையில் இவ்வளவு சத்து உள்ளதா?
8 நடைப்பயிற்சி 8 நடைப்பயிற்சி
இருதயம் சீராக இயங்க இருதயம் சீராக இயங்க
சாப்பிடும் முறை... சாப்பிடும் முறை...
மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்* மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகள்*
முக்கிய மருத்துவக் குறிப்புகள் முக்கிய மருத்துவக் குறிப்புகள்
கிட்னி கல் கரைய  பூளைப்பூ வைத்தியம் கிட்னி கல் கரைய பூளைப்பூ வைத்தியம்
நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு   சூடான குடிநீர் நல்லது நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? மாரடைப்புக்கு சூடான குடிநீர் நல்லது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.