இந்தியா வரும் 2028 ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் நாடாக திகழும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, வரும் 2028 ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் நிலையில் உள்ளது.தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 127 கோடியாக உள்ளது. வரும் 2028ம் ஆண்டில் மக்கள் தொகை 145 கோடியாக இருக்கும்;அதுவே 2100ம் ஆண்டு முடிவில், சீனாவின் மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து, 101 கோடியாகவும், இந்திய மக்கள் தொகை மிகவும் அதிகரித்து, 154 கோடியாகவும் இருக்கும் என ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்ததற்கு ஒரு குழந்தை திட்டம் தான் காரணம் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை என அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
|