|
||||||||
உண்மைத் தமிழனாய் உயர்வானோ! |
||||||||
தமிழாநீ தமிழ்மொழியை மதிக்க வில்லை தமிழனிலே பேசுதற்கும் விரும்ப வில்லை தமிழாநீ கழகநூலை மதிக்க வில்லை தமிழ்வழியில் கற்பதற்கும் விரும்ப வில்லை தமிழாநீ தமிழிசையை மதிக்க வில்லை தமிழ்க்கலைகள் பேணுதற்கும் விரும்ப வில்லை தமிழாநீ பண்பாட்டை மதிக்க வில்லை தமிழ்மரபு நெறிகளையும் விரும்ப வில்லை!
எற்றுக்குத் தமிழனென்ற பெயரில் இங்கே ஏற்றமிகு இனமென்றே முழங்கு கின்றாய் எற்றுக்குத் தமிழனென்ற பெயரில் இங்கே எம்நிலந்தான் எனும்உரிமை பேணு கின்றாய் எற்றுக்குத் தமிழனென்ற பெயரில் இங்கே எம்முன்னோர் எனும்பெருமை பேசுகின்றாய் எற்றுக்குத் தமிழனென்ற பெயரில் இங்கே ஏளனத்தில் நாணமின்றி வாழு கின்றாய்!
நந்தமிழன் எனச்சொல்ல மொழியின் பற்றும் நலன்காக்கும் நல்லுணர்வும் இருக்க வேண்டும் செந்தமிழன் எனச்சொல்ல இனத்தின் பற்றும் செருபகையை வெல்துணிவும் இருக்க வேண்டும் எந்தமிழன் எனச்சொல்ல கழக நூல்கள் எடுத்தியம்பும் நெறிநெஞ்சில் இருக்க வேண்டும் முத்தமிழன் எனச்சொல்ல புகழை நட்ட மூவேந்தர் மறமானம் இருக்க வேண்டும்!
பிறமொழிக்கு அடிமைசெய்யும் இழிவை விட்டு பிறமொழிக்குப் பிறந்தவரின் தலைமை விட்டு புறமுதுகில் தம்மினத்தைக் குத்தல் விட்டு புரையாக்கும் சாதிகளின் பிடிப்பை விட்டு உறவெங்கு துயர்படினும் ஓடிச் சென்று உரியவழி உரிமையினைப் பெற்றுத் தந்து அறக்குறளை அருந்தமிழை உலகி லேற்றும் ஆற்றலுடன் திகழ்பவனே தமிழ னாவான்!
- கருமலைத்தமிழாழன்
|
||||||||
by Swathi on 05 Nov 2014 0 Comments | ||||||||
Tags: Thamilan Unmai Thamilan Karumalai Thamilaalan கருமலைத்தமிழாழன் தமிழன் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|