LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர்

1.மழைப் பெய்யும்
எல்லோரும் ஓடி வீட்டினுள்
அடைவார்கள்..

நான் ஜன்னலோரம்
வெளியே நிற்பேன்
நீ ஜன்னலோரம்
உள்ளே நிற்பாய்

மழைக்கு தெரியும்
உன்னையும் என்னையும்..
 

2. கடைக்கு
காய்கறி வாங்க வருவாய்

எழுதிவந்ததைப் போல்
மடமடவென்று சொல்வாய்

நான் அருகில்
ஒன்றையோ இரண்டையோ
உனக்காக வாங்கிக் கொண்டு
சும்மா நிற்பேன்

திரும்பிப் போகையில்
நீ முன்னே போவாய்
நான் பின்னே
பேசாமலே வருவேன்

வீடுவரை இப்படித்தான்
என்றாலும்
வீடு வந்ததும் சற்று நிதானமாக
நீ நடப்பாய்

நான்
வீடு வந்துவிட்டதே என்று
வேகமாக வருவேன்

உனக்கும்
எனக்கும்
நிழலளவில்
மனசுரசும்

நீ ஒருமுறை என்னை
திரும்பிப் பார்த்துவிட்டு
உள்ளே போய்விடுவாய்

நானந்தப் பார்வைத் தூக்கிக்கொண்டு
உலகெல்லாம் சுற்றிவருவேன்..
 

3. காதலுக்கு வசியமாகிற மாதிரி
உலகு
வேறெதற்கும் ஆவதில்லை

அதென்னவோ நான்
வெளிய வந்தால்
நீயும் வெளியே வருவாய்

உன்னை நினைப்பேன்
நீயும் நினைத்ததாய்ச் சொல்வாய்

ஏதேனும் வாங்கநினைத்தால்
நீயே வாங்கிவருவாய்

உன்னை பிடிக்குமென்று
சொல்ல நினைத்தால்
உனக்கும் மிக பிடிக்குமென்பாய்

ஏன்; உனக்குக்
காய்ச்சலென்றால் கூட
எனக்கும்
காய்ச்சல் வரக்காண்கிறேன்

எனக்கு இதனால் ஒரு
பெரிய பயமுண்டு –

நாளைக்கு ஒருவேளை எனக்கு
மரணம் வருமென்றால் –

உன்னை நினைக்காமலையே நான்
மரணித்துப் போகவேண்டும்..

 

- வித்யாசாகர்

by Swathi   on 05 Mar 2015  0 Comments
Tags: Vidhyasaagar Kavithaigal   Uyir Kavithaigal   Unnodu Irunthal Kavithaigal   வித்யாசாகர் கவிதைகள்   காதல் கவிதைகள்   உயிர் கவிதைகள்   வித்யாசாகரின் காதல் கவிதைகள்  
 தொடர்புடையவை-Related Articles
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
மரணத்தை விழுங்கும் ரகசியம்.. மரணத்தை விழுங்கும் ரகசியம்..
குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. - வித்யாசாகர்! குட்டைக் கால்களின் பனைமரக் கதை.. - வித்யாசாகர்!
அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர் அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர்
என் அவளுக்கு மட்டும்...  - தண்மதி என் அவளுக்கு மட்டும்... - தண்மதி
உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர் உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்.. (காதல் கவிதை) வித்யாசாகர்
இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர் இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர்
வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர் வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.