LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

உண்மையை சொன்னால் உன் போல் எனக்கு காதலிக்க தெரியாது..!!

அன்பாய் ஒரு வார்த்தை பேசியவனில்லை 
அக்கறை கேள்விகள் கேட்டவனில்லை
ஆசைகள் ஏதென்று அறிந்தவனில்லை 
அதன்படி யாதொன்றும் செய்தவனில்லை

 

கோல விழி பார்த்து கொஞ்சியதில்லை 
கோவத்தில் திட்டிவிட்டு கெஞ்சியதில்லை 
 
நட்புடன் கை கோர்த்து நடந்தது இல்லை 
நல்லதோ கெட்டதோ பகிர்ந்தது இல்லை 

 

செல்லமாய் பேர் வைத்து அழைத்ததும் இல்லை
மெல்லமாய் என் காதல் உரைத்ததும் இல்லை
உல்லாச பயணமோ உறவாடும் தருணமோ 
ஒருபோதும் நமக்கு வாய்த்ததே இல்லை 

 

பின் எங்ஙனம் தான் உணர்ந்தாயோ..!!? 

 
என் உயிரின் தேவையை
திசுக்களில் ஒளிந்திருக்கும் 
தினையளவு காதலை
உஷ்ண வார்த்தைகளின் 
உள்ளிருக்கும் உண்மையை !
அதட்டல் மொழியின் ஆழத்திலிருக்கும் 
அன்பை அக்கறையை !

 

பொழுதெல்லாம் உடனிருந்து புரியாத போதும் 
 
புயலொன்று நகரத்தின் நாக்கு அறுத்த -அந்த 
பொல்லாத மௌனத்தில் தான் புரிந்து தொலைத்ததடி
"
ஒற்றை இதயத்தில் நம் உயிர் துடிப்பது"

Unmaiyai Sonnal Un Pol Enakku Kadhalikka Theriyathu..!!
by Selvakanthan   on 29 Dec 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.