LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன்

தினமும் அந்த வயதான மனிதர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே நடப்பதைப்பார்த்த குமாருக்கு சிரிப்பாக இருந்தது . குறிப்பிட்ட கடைக்காரரிடம் சென்று காரசாரமாக பேசிவிட்டு திரும்பவும் சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வீடு திரும்பினார் பெரியவர்

குமாருக்கு இது பெரும் மண்டை குடைச்சலாக இருந்தது

ஒன்று சைக்கிளில் ஏறி போகலாம் .அல்லது ஒரு ஊன்றுகோலை ஊன்றி நடக்கலாம் அதைவிட்டு இவர் ஏன் தள்ளிக்கொண்டு போகிறார் என்று.இது தினமும் வாடிக்கை தனக்கு இருந்த உறுத்தலை பெரியவரிடம் கேட்டே விட்டான்.

ஐயா,தினமும் நீஙக இந்த சைக்கிளை தள்ளிக்கொண்டே வருகிறீர்கள் ஏன் ஏறிப்போகலாமே ஏன் சைக்கிள் ஓட்டத்தெரியாதா? என்றுகேட்டான் .

யார் சொன்னா எனக்குசைக்கிளோட்டத்தெரியாதுன்னு,ஒரு காலத்தில் சைக்கிள் ரேசில் முதல் பரிசு வாங்கியவன் இப்போ காலைத்தூக்கிப் போடமுடியலே காலில் வலி அதான் அதோட ஒரு சப்போர்ட்டுக்கு இதை தள்ளிக் கொண்டு வரேன்

இதற்கு நீங்க ஒரு ஊன்று கோலை உபயோகப்படுத்தலாமே,அதை விட்டு சைக்கிளைத்தள்ளமுடியாம் தள்ளுவானேன் ..புரியலை சார்

அதுவா,அந்த கடைக்காரன் வாங்கிய கடனை கொடுக்காம ரொம்ப நாளா இழுத்தடிக்கிறான் நானும் நடையா நடக்கிறேன். அவனும் அசைய மாட்டேனென்கிறான் ஊன்றுகோலை ஊன்றி நடந்தா இந்தாளுக்கு வயசாயிட்டு சீக்கிரம் போயிடுவான்னு நினைச்சுடுவான் கடனைகொடுக்கவேண்டாம்னு நினைச்சுடுவான் ,சைக்கிளைத்தள்ளி வந்தா இவன் தெம்பாத்தான் இருக்கான்னு நினைச்சு கடனை கொடுத்துருவான்னு நினைச்சுத்தான் சைக்கிளைத்தள்ளி வருகிறேன் என்று சொன்னதைக்கேட்டதும் குமார் நினைத்துக்கொண்டான் பெரிசு விவரமாத்தான் யோசிக்குது.

 

- சரஸ்வதி ராசேந்திரன்

by Swathi   on 20 Mar 2015  0 Comments
Tags: Saraswathi Rajendran   Saraswathi Rajendran Short Stories   ஊன்று கோல்   Untru Kol   சரஸ்வதி ராசேந்திரன்   சரஸ்வதி ராசேந்திரன் சிறு கதைகள்     
 தொடர்புடையவை-Related Articles
கலாச்சார மீறல் - சரஸ்வதி ராசேந்திரன் கலாச்சார மீறல் - சரஸ்வதி ராசேந்திரன்
செத்தவன் - சரஸ்வதி ராசேந்திரன் செத்தவன் - சரஸ்வதி ராசேந்திரன்
ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன் ஊன்று கோல் - சரஸ்வதி ராசேந்திரன்
ரத்து - சரஸ்வதி ராசேந்திரன் ரத்து - சரஸ்வதி ராசேந்திரன்
அந்த பண்டிகை  நாளில் - சரஸ்வதி ராசேந்திரன் அந்த பண்டிகை நாளில் - சரஸ்வதி ராசேந்திரன்
செக் - சரஸ்வதி ராசேந்திரன் செக் - சரஸ்வதி ராசேந்திரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.