|
||||||||
உப்பு உருண்டை(uppu urundai) |
||||||||
தேவையானவை: புழுங்கல் அரிசி – 2 கப் கடலை பருப்பு – 1/2 கப் தேங்காய் – சிறிதளவு கடலை பருப்பு – ஒரு பிடி காய்ந்த மிளகாய் – 5 கடுகு, உளுந்து-சிறிதளவு எண்ணை-சிறிதளவு உப்பு-தேவையான அளவு செய்முறை 1.முதலில் அரிசியை , பருப்பை தண்ணீரில் 8 மணி நேரம் ஊரவிடவும். 2.பிறகு பருப்பை கரகரப்பாக அரைக்கவும். அரிசியை மிருதுவாக அரைத்து முன்னம் அரைத்த பருப்புடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். 3.ஒரு கடாயில் சிறிதளவு எண்ணை விட்டு அதில் கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும். 4.பிறகு அதில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். 5.கலவை நன்றாக வதங்கியதும் அதில் அரிசி, பருப்புக் கலவையைக் கொட்டிக் கெட்டியாகும்வரை கிளறி இறக்கி ஆறவிடவும். 6.பிறகு அந்தக் கலவையை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் வைத்துவேகவைத்து எடுக்கவும். சுவையான உப்புருண்டை தயார். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|