LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

உறங்கியது போதும் ...

பற்றி எரிகிற

பாக்தாக் ...


வெண்

மேகங்களையெல்லாம்

துரத்திவிட்டு

கரும்புகைக்கு

தன்னை விற்றுவிட்ட

வானம் ....


தலையில்

தீவைக்கப் பட்ட

வானளாவிய

கட்டிடங்கள் ...


மனித வேட்டையாட

வானில்

வானவேடிக்கை

நடத்துகிற

உலோகப் புறாக்கள் ....


நீலிக்கண்ணீர்

வடித்த

பெரிய மனிதர்களே....


நினைவு படுத்துகிறேன்

\” அந்த நாளை \ “ ...


உய்ப்பலி

தவறென்று

முரசறைந்தீர்களே....


மனித உயிர்கள்

மகத்தானதென்று

சேதி சொன்னீர்களே ......


அணு குண்டுகள்

ஆபத்தானதென்று

பரிதாபப்படீர்களே .....


மனிதாபிமானம் பற்றி

அழுது தீர்த்தீர்களே ...


“ அமைதி “ பற்றி

ஆழமாய்

எங்களுக்கு

புத்தி சொன்னீர்களே .....


அதோ அதோ ....


கண்ணில்

கண்ணீரோடும்

ஓலமிடும் சப்தத்தோடும்

தலையில்

முண்டாசு கட்டிய

குழந்தை ஒன்று ...


அதோ அதோ ....


கணவனை இழந்த

கதறியழும்

பெண்கள் ஒருபுறம் ....


அதோ அதோ ...


தலைமட்டும்

ஒருபுறம்

சிதைக்கப் பட்ட

சடலம் ஒன்று ...


அதோ அதோ .....


இறந்து போன

குழந்தை ஒன்றை

கட்டியழும்

தாயொருத்தி ....


வெள்ளைப் புறாக்களை

உலகெங்கும்பறக்க விட்ட

மா மேதைகளே .....


மனித நேயத்தின்

மதில கோட்டைகளே ....


மனிதாபிமானத்தின்

மாசறு மன்னர்களே ....


என் தேசம்

ஈன்ற ஆன்றோர்களே .....


உறங்கியது

போதும் ....


எழுந்து

வாருங்கள் .....


இப்போதெல்லாம்

வெறும் கண்டணக்குரல் கூட

கொடுக்கமுடியா

வியாபாரக்கைதிகள்

நாங்கள் ....


இன்னும்

சில காலம் போனால் ...


உங்கள்

கல்லறைகள் கூட

காவு போய்விடும்

வியாபார நோக்கோடு .....


கல்லறைக்குள்

நீங்கள்

உறங்கியது போதும் ...


எழுந்து வாருங்கள் .....


இனியாவது

வெள்ளைப் புறாக்கள்

உலாவரட்டும் .......


அந்த

உலோகப் புறாக்கள்

ஒதுங்கட்டும் .....

-      குகன்

by uma   on 07 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.