LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம்

உறவு என்றால் சலுகையா?

என் சகோதரர் எம் . ஏ . பட்டம் பெற்றவர் . அரசு நடத்திய தேர்வில் வெற்றியடைந்து கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளர் ( டெபுடி - ரிஜிஸ்தாரர் ) பணியில் சேர்ந்தார் .

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் , ‘ மந்திரி மகன் என்பதால் அவருக்கு அரசில் உயர் பதவியா ?’ என்று கேள்வி எழுப்பினார் .

முதுகலை ( எம் . ஏ .) பட்டம் பெற்றபின் , அரசு நடத்திய தேர்வில் முறையாகப் பங்கேற்று நிறைய மதிப்பெண்கள் பெற்ற தகுதியின் அடிப்படையில்தான் அமைச்சரின் மகனுக்கு அரசுப் பணி கிடைத்தது என்று விளக்கம் அளிக்கப்பட்டது .

இதைப்பற்றிக் கேள்வியுற்ற அறிஞர் அண்ணா அவர்கள் , “ திரு . கக்கன் அவர்கள் மாதிரி ஓர் அமைச்சர் நேர்மையாக இருந்து விட்டால் , எதிர்க்கட்சிகளுக்கு வேலையே இருக்காது” என்று என் தந்தையின் நேர்மையை நெஞ்சாரப் பாராட்டினார் .

எங்கள் திருமணத்துக்கு முன்பே என் கணவர் திரு . சிவசுவாமி அவர்கள் பொதுப்பணித் துறையில் இளநிலைப் பொறியாளராக ( ஜூனியர் எஞ்சினியர் ) வேலை செய்தவர் ஆவார் . அதனால் , அவர் பெயர் உதவிப் பொறியாளர் பதவி உயர்வுக்காகத் தமிழ்நாடு அரசு அலுவலர் தேர்வாணைக் குழுவின் உயர் பதவித் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்று இருந்தது . என்னைத் திருமணம் செய்த பிறகு , பணி உயர்வு கிடைக்கும் என்று என் கணவரின் உறவினர்களும் என் கணவரும் நினைத்தனர் .

ஆனால் , அதைப் பற்றிய பேச்சு வந்தபோது , என் தந்தையாரோ , ‘ அவருக்குப் ‘புரமோஷன்’ வரும்போது வரட்டும் . அவரது பதவி உயர்வுக்காக நான் சிபாரிசு செய்யமாட்டேன் !’ என்று சொல்லி விட்டார் .

by Swathi   on 29 Nov 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.