LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 734 - அரணியல்

Next Kural >

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.)
மணக்குடவர் உரை:
மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
உறுபசியும் -கடும்பசியும்; ஓவாப் பிணியும் - தீரா நோயும்; செறு பகையும் - அழிக்கும் பகையும்; சேராது இயல்வது நாடு - இல்லாது இனிது நடப்பதே (வாழ்க்கைக் கேற்ற ) நல்ல நாடாம். 'உறுபசி' உழவரின்மையாலும் நீர் வளம் நிலவளமின்மையாலும் நேர்வது. 'ஓவாப்பிணி' நிலக்கேட்டாலும் நச்சுக்காற்றாலும் தட்ப வெப்ப மிகையாலும் நுகர்ச்சிப் பொருள் தீமையாலும் நேர்வது. 'செறுபகை' அரசனாற்றலும் நல்லமைச்சும் படைவலியும் அரண்வலியும் துணைவலியும் இன்மையால் நேர்வது. இக்குறைகளும் கேடுகளும் இன்றேல் அவற்றால் விளையும் தீங்குகளும் இல்லை என்பதாம்.
கலைஞர் உரை:
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு.
Translation
That is a 'land' whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.
Explanation
kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.
Transliteration
Urupasiyum Ovaap Piniyum Serupakaiyum Seraa Thiyalvadhu Naatu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >