உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும். |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
உறு பசியும் - மிக்க பசியும்; ஓவாப்பிணியும் - நீங்காத நோயும்; செறுபகையும் சேராது - புறத்து நின்றுவந்து அழிவு செய்யும் பகையும் இன்றி; இயல்வது நாடு - இனிது நடப்பதே நாடாவது. (உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும் சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர் வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின் சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலைப்படையும் அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.) |
மணக்குடவர் உரை: |
மிகுந்த பசியும், இடையறாத பிணியும், ஒறுக்கும் பகையும், சேராது இயல்வது நாடு. இது சேர்தலாகாதன கூறிற்று. |
தேவநேயப் பாவாணர் உரை: |
உறுபசியும் -கடும்பசியும்; ஓவாப் பிணியும் - தீரா நோயும்; செறு பகையும் - அழிக்கும் பகையும்; சேராது இயல்வது நாடு - இல்லாது இனிது நடப்பதே (வாழ்க்கைக் கேற்ற ) நல்ல நாடாம். 'உறுபசி' உழவரின்மையாலும் நீர் வளம் நிலவளமின்மையாலும் நேர்வது. 'ஓவாப்பிணி' நிலக்கேட்டாலும் நச்சுக்காற்றாலும் தட்ப வெப்ப மிகையாலும் நுகர்ச்சிப் பொருள் தீமையாலும் நேர்வது. 'செறுபகை' அரசனாற்றலும் நல்லமைச்சும் படைவலியும் அரண்வலியும் துணைவலியும் இன்மையால் நேர்வது. இக்குறைகளும் கேடுகளும் இன்றேல் அவற்றால் விளையும் தீங்குகளும் இல்லை என்பதாம். |
கலைஞர் உரை: |
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும். |
சாலமன் பாப்பையா உரை: |
மிகுந்த பசி, நீங்காத நோய், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகை ஆகிய இவை இல்லாமல் இருப்பது நாடு. |
Translation |
That is a 'land' whose peaceful annals know,
Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe. |
Explanation |
kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes. |
Transliteration |
Urupasiyum Ovaap Piniyum Serupakaiyum
Seraa Thiyalvadhu Naatu |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|