LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ஆப்கன் எல்லைப்பகுதியில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தல்!

 ‘‘ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார். 

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் கட்டுப்படுத்த வேண்டும், அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி இந்த ஆண்டு தொடக்கத்தில், அந்நாட்டுக்கு வழங்கி வந்த பல ஆயிரம் கோடி நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது.  புதிய பிரதமர் இம்ரான்கான் பொறுப்பேற்றதை அடுத்து கடந்த செப்டம்பரில் அமெரிக்கா  வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பாகிஸ்தான் சென்று இம்ரான்கானை  சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், வாஷிங்டனில்  பாம்பியோ அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘‘தெற்கு மத்திய ஆசியாவை பொறுத்தவரையில் அமெரிக்காவின் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் தனது மேற்கு எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்கக் கூடாது என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. 

பாகிஸ்தானில் இயங்கும் அனைத்து தீவிரவாத இயக்கங்களையும் அந்நாடு தடை செய்ய வேண்டும். இந்த விஷயத்தை இதற்கு மேல் தெளிவுபடுத்த முடியாது. இது குறித்து பாகிஸ்தான் கவலைப்படவில்லை என்றால் அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 

அனைவரும் விரும்பும் இடத்திற்கு நாங்கள் செல்ல முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஆப்கானிஸ்தானில் சமரசம் தேவை என அனைவரும் விரும்புகின்றனர். அதை அடைய வேண்டுமென்றால் நீங்கள் தலிபான்கள், ஹக்கானி மற்றும் பாகிஸ்தானில் உள்ள பிற தீவிரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்கக் கூடாது."

இவ்வாறு அவர் கூறினார்.

by Mani Bharathi   on 25 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு. 5000 இலவச பாஸ்போர்ட்களை வழங்கி திறமையான வெளிநாட்டு ஊழியர்களை அழைக்கும் எல் சால்வடார் அரசு.
உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள். உலகில் ஒரு விமான நிலையம் கூட இல்லாத நாடுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்.
சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்? சூரிய ஒளியைத் திருப்பி அனுப்பி...பூமியைக் குளிர்விக்கச் சோதனை நடத்தும் விஞ்ஞானிகள்?
சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா. சூரிய கிரகணத்தில் மூன்று ராக்கெட்டுகளை அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா.
நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்! நிலவு ஊர்தி வடிவமைப்பில் நாசா 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!
செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை. செயற்கை சூரியனின் புதிய சாதனை., 48 வினாடிகளில் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை.
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம். 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் அரிய நிகழ்வு ; பூமியை நெருங்கி வரும் வால்நட்சத்திரம்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.