|
||||||||
ஊத்தப்பம் (uttapam) |
||||||||
தேவையானவை: இட்லி மாவு - 2 கப் ரவை – 2 டேபிள்ஸ்பூன் வெங்காயம் – 2 கேரட் – 1 குடமிளகாய் – 2 தக்காளி – 2 பச்சைப் பட்டாணி – 1/4 கப் பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லி – சிறிது உப்பு – 1/2 டீஸ்பூன் சீஸ் – துருவியது எண்ணை-சிறிதளவு, கடுகு-சிறிதளவு, சீரகம்-சிறிதளவு, பெருங்காயம்-சிறிதளவு, கறிவேப்பிலை-சிறிதளவு, செய்முறை: 1.முதலில் இட்லி மாவில் உப்பு, ரவையைக் கலந்துகொள்ளவும். 2.வெங்காயம், குடமிளகாய், தக்காளியை மெல்லிய, நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 3.கேரட்டை பெரிய அளவில் துருவிக் கொள்ளவும். 4.பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்க அஞ்சுபவர்கள் இரண்டாக மட்டும் கீறிக் கொள்ளவும். ஊத்தப்பம் இடையில் கண்ணில் பட்டால் தூர எறிந்துவிடலாம். 5.ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம் பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து மாவில் சேர்க்கவும். 6.நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, கொத்தமல்லித் தழையை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். 7.தோசைக் கல்லில் மாவை கனமாகப் பரத்தி, அதன்மேல் காய்கறிக் கலவையில் சிறிது தூவி சுற்றி நிறைய எண்ணை விட்டு, மூடிவைக்கவும். 8.குறைந்த சூட்டில் வெகு நிதானமாக வேக வேண்டும். 3அல்லது4 நிமிடங்கள் கழித்து மெதுவாகத் திருப்பிப் போட்டு பரிமாறவும். |
||||||||
by anitha on 29 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|