|
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 2- பகுதி 1- குறலோடு உறவாடு - டாக்டர். சுப. திருப்பதி - உயிர்த்தீண்டலும் மெய்த்தீண்டலும் |
|||||
எனைத்தானும் நல்லவை கேட்க : 2- பகுதி 1- குறலோடு உறவாடு - டாக்டர். சுப. திருப்பதி - உயிர்த்தீண்டலும் மெய்த்தீண்டலும் நரம்பியல் நிபுணர்: டாக்டர். திரு. சுப. திருப்பதி அவர்கள் மதுரையில் பிறந்தவர். திருச்சியில் பணிபுரிகின்றார். சிறந்த நரம்பியல் நிபுணராகச் செயல்படுபவர். வ.சு.ப. மாணிக்கனாரின் சகோதரரின் பேரன் இவர். சிறு வயதிலிருந்தே தமிழ் மீது தீராத காதல் கொண்டவர். குறிப்பாகத் திருக்குறளின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பிடித்தமான குறள்: ‘கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூம் ஐயம் தரும்.’ என்ற குறள் மிகவும் பிடித்தமான குறள் என்று குறிப்பிடுகிறார். ‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்’ தற்போது நாம் பேசுவதெல்லாம் ‘குறைமொழி’ ஆகும். நிறைமொழியானது ஒரு சிறு வார்த்தையைக் கூறும் போதே அவர் கூறவருவதை விளங்கிக் கொள்ளுதல் ஆகும். மருத்துவத்துறையில் இவை போன்ற நிறைமொழி அணுகுமுறை அதிகம் நடக்கும். அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் ஒருவர் இங்குள்ள இதய நோயாளி ஒருவரின் நிலை என்ன என்று கேட்டால் ஒரு சிறு குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தினால் போதும். அவர் புரிந்து கொள்வார். இதுவே நிறைமொழி ஆகும். ‘மறைமொழி்’ என்பது இன்னும் சற்று நெருக்கமானது. அதாவது நம்மோடு நெருக்கமாகப் பழகிய மனைவியோ, பிள்ளைகளோ, நண்பர்களோ நாம் பேச வருவது என்னவென்று நம் முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்வர். இது ‘மறைமொழி’ ஆகும். உளவியல் நிபுணர் திருவள்ளுவர்: ‘மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ விருப்பமுள்ள உணவாக இருந்தாலும் அளவோடு உண்டு வந்தால் உடலிற்கு நோய் எதுவும் வராது. நலமுடன் நீண்ட நாள் வாழலாம். ‘உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால் நாற்கூற்றே மருந்து’ நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவத்துறை நான்கு வகைப்பாடு உடையது எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். மேலும் செவிக்கு உணவில்லாத போதே வயிற்றுக்குச் சிற்றுண்டி தேவைப்படுகிறது என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஆக உடலுக்குத் தேவையான உழைப்பு இருந்து கொண்டே இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் ஐம்புலன்களைத் தீண்டுவது நல்ல தொடுதல் என்றும், அதைத் தாண்டி தொடுதல் கெட்ட தொடுதல் என்றும் அன்றே கூறியிருக்கிறார். நன்கு ஆராய்ந்தோமானால் உலகியல் சிக்கல்களுக்கு மனிதனின் உள்ளம் மூலமாகவே தீர்வுகளைக் கூறியுள்ளார். மனிதனின் உள்ளத்தை சரிபடுத்திவிட்டால் தவறுகள் எதுவம் விழையாது என்று கூறுகிறார். உலகியல்: ‘வகுத்தான் வகுத்த வகையெல்லாம் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ எவ்வளவு சொத்து சேர்த்தாலும் சேர்த்த அனைத்தையும் நம்மால் அனுபவிக்க இயலாது. எனவே இருக்கின்ற வரை அனைவருக்கும் கொடுத்து நாமும் நலமுடன் வாழ வேண்டும் என்று உலகியலை எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர். |
|||||
by Lakshmi G on 11 Oct 2020 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|