LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

உயிர்களிடத்தே அன்பு வேணும்

வேகமாகப் போய்க் கொண்டிருந்த ஒரு பேருந்து மரத்தின் மீது மோதி பலத்த விபத்துக்குள்ளானது . பேருந்தில் வந்த அனைவரும் சிதறி வெளியே விழுந்தனர் . கையிலே அடி , கால்லே அடி , ஐயோ அம்மாங்கிற கூக்குரல் எல்லாப் பக்கமும் . அந்த நேரத்துலே எல்லோரையும் மருத்துவ மனையைக் கண்டுபிடிச்சு சேர்க்கிறதுக்குப் பதிலா கண்டக்டர் அடிபட்டு விழுந்தே கிடக்கிற பயணிகளோட சட்டைப் பையிலே என்னவோ தேடிக்கிட்டிருந்தார் . “ என்னன்னு ” கேட்டா ? “ யாரோ ஒரு ஆள் டிக்கெட் வாங்கலை பஸ் கிளம்பின நேரத்திலே இருந்து பார்க்கிறேன் . கணக்கு சரியா வரலை ” ங்கிறார் .

அதுகூட பரவாயில்லை . கை ஒடிந்து விழுந்து கிடக்கிற ஒரு ஆள் “ எனக்கு மூணு ரூபா சில்லரை பாக்கி தரணும் மறந்துடாதீங்க ” அப்படிங்கிறார் .

இப்படி மனிதர்களே மனிதர்களை மதிக்காத சூழ்நிலையில் மனிதர்களை மட்டும் அல்ல மற்ற உயிரினங்களையும் , சட்டத்தையும் மதித்து நடந்த மாபெரும்தலைவர் காமராசர் .

பெருந்தலைவர் பிறரிடம் அன்பு காட்டுகின்ற அதே நேரத்தில் பிறரிடம் காணும் குறைபாடுகளையும் கண்டிப்பார் . ஒரு சமயம் வண்ணாரப் பேட்டையிலே கூட்டம் ஒன்றை முடித்துக்கொண்டு திரும்பிய போது சென்ட்ரல் அருகே கார் வலது புறம் திரும்ப முயன்றது .

உடனே பெருந்தலைவர் “ வழக்கமாகப் போவது போல அந்தக் கோடி வரை போய் வந்துதான் திரும்ப வேண்டும் . இரவு நேரம் போக்குவரத்து இல்லை என்பதற்காக இப்படி குறுக்கே போய்ப் பழகினால் பகலிலும் அப்படித்தானே போகத் தோன்றும் , நம்ம காரே இப்படிப் போனா மத்தவங்க என்ன நினைக்க மாட்டாங்க ? அதனாலே நேராகப் போ ” என்று பொரிந்தார் .

ஒருநாள் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு திரும்பிக்கொண்டிருந்த போது கார் திடீரென ஒரு குலுக்கலுடன் நின்றது . ஒளி வெள்ளத்தால் கண்கள் கூசின . காமராசர் கோபத்துடன் , எதிரே வந்த லரியை நிறுத்தச் சொன்னார் . எப்படி வெளிச்சத்தோடு வர்ரான் . இரவு நேரம் எதிரே வரும் வாகனம் ஓட்டுபவருக்கு கண் கூசாது . இந்த விதி தெரியாமல் வருபவரை இனிமேல் இந்த அஜாக்கிரதையோடு வராமல் வண்டி ஓட்டுங்கள் என்று கண்டித்து அனுப்பினார் .

இதே போன்று ராயபுரம் கல் மண்டபம் வந்து கொண்டிருந்தார் பெருந்தலைவர் . எதிரே ஒரு மாட்டு வண்டி வந்து கொண்டு இருந்தது . அதற்குப் பின்னால் வந்த லாரி மாட்டு வண்டியை முந்திச் செல்ல முயன்ற போது லாரி டிரைவர் பெரியதாக ஹாரன் அடித்துக்கொண்டிருந்தார் . வண்டியோட்டி மாட்டை அடித்து விரட்டிக் கொண்டிருந்தார் . இதைப் பார்த்த தலைவர் காரை விட்டு இறங்கி வண்டியோட்டியிடம் ஏம்பா இறங்கு . மாடு எப்படி தவிக்குது பாரு என்றவர் , லாரி டிரைவர் ஹாாரன் அடிப்பதைக் கண்டித்து , மாடு மிரளுது நீ ஓயாமல் ஹாரன் அடிக்கிறாயே என்று கூறினார் .

சாதாரண ஜீவன்கள் கூட துன்பப்படுவதைப் பொறுத்துக் கொள்ளாத பெருங்கருணை உடையவர் பெருந்தலைவர் .

by Swathi   on 21 Aug 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.