LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..

1, விடு விடு
மதமாவது
சாதியாவது
மண்ணாவது;

போவது உயிரெனில்
யாராயினும் தடு;
உயிர்த்திருத்தல் வலிது..

2, ஐயோ சுனாமி
நிலநடுக்கம்
புயல்
மழை
வெள்ளம்
மரணம் மரணம்
கத்தாதே, ஏதேனும் செய்!!
 
3, ஒருவேளை பட்டினி
மரணத்தைவிட
வெகு சிறிது


சிலரின்
மரணத்தை
ஒரு வேளை சோறோ
கையளவு நீரோதான்
தீர்மாணிக்கிறது,

வாருங்கள்
நமது
ஒருவேளைப் பட்டினியையேனும்
உலக ஏழைகளின் -
மரணத்திற்கு எதிராக சேகரிப்போம்..

4, பரக்
பரக்
பரக்கென
ஒரு கையை கழுவ
பத்து கிளீ னிக்ஸ் இழுப்போரே

நிறைய மரங்களை வெட்டினால் தான்
அது காகிதமாகி பின்னர்
அதிலிருந்து ஒரு கட்டு
கிளீனிக்ஸ் கிடைக்கிறது.,
 
கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்
மிஞ்சும் மரங்களால் - நாளையொரு
நிலநடுக்கமோ
மழையின்மையொ  இல்லாதுபோகலாம்..
 
5, சோற்றை
பரிமாறிக் கொள்ளுங்கள்
பட்டினியை
மனிதத்தால் நிரப்பி
கண்ணீரை
பெருந்தன்மையால் துடைத்துபோடுங்கள்..


பசியில்
ஓருயிர் இறப்பதென்பது
உயிரோடிருப்பவருக்கு
இழுக்கு!!
 
6, சோற்றை இரைக்காதீர்
சோறு உயிருக்கு வேர்


தண்ணீரை சேமியுங்கள்
நீர் உயிருக்கு நேர்
 
காற்றை வீசச் செய்யுங்கள்
காற்று உயிரின் மூலம்

அதற்காக
அனைத்தையும்
ஓருயிரிற்காகமட்டுமே பதுக்கிக்கொள்ளாதீர்கள்;

காற்றோ
தண்ணீரோ
சோறோ
பிறரின் உயிரைவிட பெரிதில்லை

உயிர் எல்லாவற்றிலும் வலிது!!
 
7, நீதிக்கு போராடினால்
ஏழையை பணக்காரன் அடிக்கிறான்
 
தர்மம் பற்றி பேசினால்
ஆள்பவன் அடிமையே என்கிறான்

நாட்டிற்கு போராடினால்
வந்தவன் வாழ்பவனை கொல்கிறான்

வயிற்றுக்கு போராடினால்
மரத்திற்குபதில் –
மனிதரின் உயிரையே எடுக்கிறான்

போதும் போதும்..

இதிலெல்லாம்
நாம் அழிகிறோம்
நான் அழிவதேயில்லை..

நான் அழிகையில்
இதலாம் அடங்கி
நாம் வாழக்கூடும்..
 
8, மண்ணிற்கு தெரியாது
இது மலர்
இது மரம்
இது விலங்கு
இது மனிதர்
இது இந்தியா
இது நேபாலென்று;

நமக்குத் தெரியும்
இறந்தது அத்தனையும் உயிர்..
 
9, கொஞ்சம் மின்சாரம்
கொஞ்சம் தேநீர்
கொஞ்சம் உணவு
கொஞ்சம் ஆடை
கொஞ்சம் தங்கம்
கொஞ்சம் பணம்
கொஞ்சம் செலவு
கொஞ்சம் தேவை
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சம் கொஞ்சமாக
தனக்கானதை முதலில் குறைத்துக்கொள்ளுங்கள்..

மெல்ல மெல்ல இதனால்
மாறும் உலகில்
மிஞ்சியதெல்லாம் பிறரின் மகிழ்ச்சியும்
தனக்குள் தான் சேமித்தத் தெய்வீகமாகவும் இருக்கலாம்..
 
10, கவிதை, இலக்கணம் தாண்டி
காதலில்
அரசியலில்
வாழ்தலில்
சாதலில்
இணையத்தில்
எங்கெங்கோ இருக்கிறது;

எப்படி எப்படியோ
முளைக்கிறது;

கவிதையாக இல்லாமலே
எண்ணத்துள் ஏறிநின்று கர்ஜிக்கிறது;

அதனுள்
கொஞ்சம் தோண்டி
நானும்
பிறர் சிந்திக்க எடுத்துக்கொண்டேன்
ஒருவேளை கவிதையாக இல்லையெனில்
மன்னிப்பீர்களாக..

சிரிப்பு வருகிறது
அதான்
எப்போதே
எனை மன்னித்துவிட்டீர்களே..


- வித்யாசாகர்

by Swathi   on 04 Jun 2015  0 Comments
Tags: Malai Vellam   Vellam Kavithai   vidhyasaagar   vidhyasaagar Kavithai   மழைவெள்ளம்   வெள்ளம் கவிதை     
 தொடர்புடையவை-Related Articles
ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர் ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்
என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர் என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர்
மரணத்தை விழுங்கும் ரகசியம்.. மரணத்தை விழுங்கும் ரகசியம்..
அறிவொழுகிய வீடு, அந்நாட்களின் அழியாத நினைவு.. அறிவொழுகிய வீடு, அந்நாட்களின் அழியாத நினைவு..
உயிர்மூழ்கிய மழைவெள்ளம்.. உயிர்மூழ்கிய மழைவெள்ளம்..
அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர் அப்போதெல்லாம் அதெல்லாம் அதுவாகத் தானிருந்தது - வித்யாசாகர்
இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர் இது முந்தைய தவறு; மூத்த நெருப்பு..வித்யாசாகர்
விளக்கில்லை வெளிச்சமுண்டு..  - வித்யாசாகர் விளக்கில்லை வெளிச்சமுண்டு.. - வித்யாசாகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.