LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

உயிரோவியம்

மலராய்

மணம் பரப்பியிருந்தேன்

மனசெல்லாம்

நீ நிறைந்திருந்தாய் !

 

என்னை

நீ பார்க்காதபோது

குருடியைப்போல்

நான் தத்தளித்தேன் !

 

என்னை

அழகிலே ரதியென்றாய்

அறிவுலே கிளியென்றாய்

எண்ணிக் கூறியதெல்லாம்

விழலுக்கு

இறைத்த நீர்தானோ !

 

நீ எனக்காக

நட்சத்திரத்தோரணம்

கட்ட வேண்டாம் !

 

நிலவை குடையாக

பிடிக்க வேண்டாம்

உன் இதயத்தில்

எனக்கு இடம் கொடு !

 

கனவிலே வருகிறாய்

நினைவலைகளில்

மிதக்க வைக்கிறாய்

நனவிலே

இலைச் சருகைபோல்

நம் இனிய காதலை

நொறுக்குகிறாய் ?

 

எனக்கு

எழுதிய காதல்

கடிதங்களை சேர்த்தால்

காதல் கோட்டையே

கட்டி விடலாமே

கட்டிய காதலை

கலைக்கலாமா?

புரிந்து கொள்

காதல் நாயகனே !

 

உன்னை மணப்பதே

என் உயிர்த் துடிப்பு

உன் மனக்கதவு  

திறக்கும் வரை

காத்திருப்பேன் !

 

அம்பிகாவதி காதல்

அமர காவியம்

அனார்கலி காதல்

கல்லறை ஓவியம்

என் காதலோ

உயிரோவியம் !

பூ.சுப்ரமணியன்,

         பள்ளிக்கரணை, சென்னை  

by Subramanian   on 19 Jul 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.