LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1287 - கற்பியல்

Next Kural >

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.)
மணக்குடவர் உரை:
தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு? இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.
தேவநேயப் பாவாணர் உரை:
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரேபோல்-தம்மை யிழுத்துக்கொண்டு போகுமென்பதை அறிந்திருந்தும் வேகமா யோடுகின்ற வெள்ளத்திற் பாய்வார்போல் ; பொய்த்தல் அறிந்து புலந்து என்-ஊடல் நீடு நில்லாமை யறிந்திருந்தும் கணவரோடு ஊடி என்ன பயன்? புலத்தலால் துன்பமே யன்றி யின்பமில்லை யென்பதாம் . பாய்வார்போற் புலந்து என இசையும் . பொய்த்தலறிந்தே னென்பது பாடமாயின் , உய்த்தலறிய ஒடு நீருட் பாய்வார்போல முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை யறிந்தேன்;இனி இது செய்தற் பாற் றன்றென வுரைக்க என்று பரிமேலழகர் உரைத்திருப்பது பொருத்தமே. ஏகாரம் பிரிநிலை.
கலைஞர் உரை:
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?
சாலமன் பாப்பையா உரை:
தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?.
Translation
As those of rescue sure, who plunge into the stream, So did I anger feign, though it must falsehood seem?.
Explanation
Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?.
Transliteration
Uyththal Arindhu Punalpaai Pavarepol Poiththal Arindhen Pulandhu

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >