|
||||||||
அரிசி வடாம் (rice vadagam) |
||||||||
தேவையானவை : பச்சரிசி – 4 கப் பச்சை மிளகாய் – 10 ஜவ்வரிசி – 1 கப் பெருங்காயம் எலுமிச்சைச் சாறு உப்பு செய்முறை: 1.இரண்டு பங்கு தண்ணீரில் ஜவ்வரிசியை முதல்நாள் இரவே இரண்டு மணி நேரம், ஊறவைக்கவும்.அதனுடன் மேலும் ஒரு பங்கு தண்ணீர், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.அடுப்பில் கனமான பாத்திரத்தில் மேலும் 3 மடங்கு தண்ணீர் வைத்து, சுட ஆரம்பித்ததும், அரைத்த அரிசிக் கலவையைக் கொட்டி, கைவிடாமல் கிளற ஆரம்பிக்கவும். 2.பாத்திரத்தில் உள்ள கலவை கட்டிகளாகச் சேர்ந்து வரும். கை விடாமல் கிளறிக்கொண்டே இருந்தால் நன்கு வெந்து நிறம் மாறி சேர்ந்தாற்போல் கெட்டியாக வந்தபின் மூடிவைத்து, அடுப்பை அணைக்கவும். 3.மறுநாள் காலையில் எலுமிச்சைச் சாறு கலந்து, தண்ணீரில் மோர் கலந்து தொட்டுக்கொண்டு ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் தேவைப்படும் வடாம்களைப் பிழிந்துகொள்ளவும்.நன்கு காயவைத்து எடுத்துவைத்து தேவைப்படும்போது பொரித்துக் கொள்ளவும். |
||||||||
by kanika on 12 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|