LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

வகர அகர வருக்கம்

 

வலவை யெனும்பெயர் வஞ்சப் பெண்ணொடு
வெறியாட் டாளனும் வல்லோன் பெயருமாம். ....1303
வருட மெனும்பெயர் மழையும் யாண்டுமாம். ....1304
வன்னி யெனும்பெயர் ஒருமரப் பெயரும்
நெருப்புங் கிளியும் பிரம சாரியுமாம். ....1305
வயலெனும் பெயரே செய்யும் வெளியும்
மருத நன்னிலமும் வழங்கப் பெறுமே. ....1306
வசியெ னும்பெயர் வாளும் வடுவும்
வசிகமுங் கூர்மையும் வழங்கப் பெறுமே. ....1307
வடவை யெனும்பெயர் வடவா வனலும்
குதிரைப் பெட்டையு மதகரிப் பிடியும்
பெண்பா லெருமைப் பெயரும் பேசுவர். ....1308
வயமெனும் பெயரே வலிமையும் புனலும்
புட்பொதுப் பெயரும் புகலுவர் புலவர். ....1309
வழியெனும் பெயரே மரபுந் தொடர்ச்சியும்
தருமமு மிடமுந் தனையனும் நடவையும். ....1310
வஞ்சனை யெனும்பெயர் மாயையும் பொய்யும்
வஞ்சகப் பெயரும் வழங்கப் பெறுமே. ....1311
வரையெனும் பெயரே மலையு மூங்கிலும்
அளவுங் கைவரையு மாகு மென்ப. ....1312
வசதி யெனும்பெயர் மனையு மூரும்
சிறப்புறு மிடமும் செப்புவர் புலவர். ....1313
வயவன் எனும்பெயர் வலிமான் குருவியும்
விறலோன் காதலன் பெயரும் விளம்புவர். ....1314
வயாவெனும் பெயரே வருத்தமும் விருப்பமும்
நோயும் கருப்பமும் நுவலுவர் புலவர். ....1315
வள்ளெனும் பெயரே வல்லி பற்றிரும்பும்
கூர்மையுங் காதும் வகிர்தலும் கூறுவர். ....1316
வண்டெனும் பெயர்கை வளையும் குற்றமும்
பூசமும் சுரும்பும் புரியும் வெண்பணிலமும்
மாதர் விளையாடலும் அம்பும் வழங்கும். ....1317
வட்ட மெனும்பெயர் பாரா வளையமும்
பரிசையுந் திகிரியும் பரந்த கைமணியும்
வட்ட வடிவுந் தடாகமு நீர்ச்சாலுந்
துகிலு மூர்கோளுஞ் சொல்லுவர் புலவர். ....1318
வஞ்சி யெனும்பெயர் மாதுமோர் கொடியும்
பாவின் விகற்பமும் போர்மேற் செலவும்
மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. ....1319
வடுகெனும் பெயரே யிந்தள விசையும்
மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. ....1320
வஞ்சக மெனும்பெயர் வாளுங் கபடுமாம். ....1321
வயிர மெனும்பெயர் வச்சிர மணியும்
மரத்தின் வயிரமும் வச்சிரா யுதமும்
சினமும் கூர்மையும் செப்புவர் புலவர். ....1322
வறிதெனும் பெயரே பயனில் வார்த்தையும்
சிறிதும் அறியாமையு மருகலுஞ் செப்புவர். ....1323
வம்பெனும் பெயரே மணமு மிடாவும்
நிலையின் மையு முலைக்கச்சும் புதுமையும். ....1324
வதுவை யெனும்பெயர் மணமும் கலியாணமும். ....1325
வழங்க லெனும்பெய ருலாவலு முரைத்தலும்
கொடுத்தலு மெனவே யறைந்தனர் புலவர். ....1326 
வலித்த லெனும்பெயர் நினைத்தலும் பேசலும். ....1327
வலம்புரி யெனும்பெயர் சலஞ்சலப் பெயரும்
நந்தியா வத்தமு நவிலப் பெறுமே. ....1328
வலவ னெனும்பெயர் வெற்றி யாளனும்
தேர்ப்பா கனுமெனச் செப்புவர் புலவர். ....1329
வள்ள மென்பெயர் மரக்காலும் வட்டிலும். ....1330
வக்கிர மெனும்பெயர் மடங்கலும் கொடுமையும்
வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. ....1331
வசந்த னெனும்பெயர் மதனுந் தென்காலுமாம். ....1332
வரியெனும் பெயர்நெற் பொதுவும் வாரியும்
எழுத்துஞ் சுணங்கு மின்னிசைப் பாடலும்
குடியிறைப் பெயரும் சந்தித் தெருவும்
நீளமு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....1333
வனமெனும் பெயரே யூர்சூழ் சோலையும்
நீருந் துழாயும் காடு மிகுதியும்
ஈரமு மெனவே யியம்பப் பெறுமே. ....1334
வடக மெனும்பெயர் வடக வுடையும்
தோலின் பெயரும் சொல்லப் பெறுமே. ....1335
வங்க மெனும்பெயர் வழுதுணைப் பெயரும்
வெள்ளீ யத்தினொடு தோணியும் விளம்புவர். ....1336
வசந்த மெனும்பெயர் வசந்த காலமும்
புரந்தரன் மாளிகை மணமும் புகலுவர். ....1337
வல்லி யெனும்பெயர் கொடியும் ஆய்ப்பாடியும்
நிகளமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....1338
வல்லெனும் பெயரே வலிமையும் விரைவும்
சூது மெனவே சொல்லுவர் புலவர். ....1339
வடுவெனும் பெயரே குற்றமும் சிறுமையும்
தழும்புஞ் சுரும்பொடு சோம்புங் காய்ப்
பிஞ்சுமாம். ....1340
வண்ண மெனும்பெயர் வடிவு மோசையும்
நிறங்களின் விகற்பமு நிகழ்த்தப் பெறுமே. ....1341
வயினெனும் பெயரே வயிறிட மனையுமாம். ....1342
வண்மை யெனும்பெயர் வளமையும் கொடுத்தலும்
வலிமையும் புகழும் வாய்மையும் வழங்கும். ....1343
வசுவெனும் பெயரே பொன்னும் கனலும்
எண்வகை யமரரும் பசுவின் கன்றுமாம். ....1344
வலமெனும் பெயரே கனமும் வெற்றியும்
இடமும் வலப்பாற் பெயரு மியம்புவர். ....1345
வன்மை யெனும்பெயர் வன்மையுங் காடும்
விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....1346
வளமெனும் பெயரே வனப்பும் பலவகை
வளமும் பதவியும் வழங்கப் பெறுமே. ....1347
வள்ளி யென்பெயர் கைவளையுங் கொடியுமாம். ....1348
வட்க லெனும்பெயர் நாணமும் கேடுமாம். ....1349
வரைதல் எனும்பெயர் நீக்கமும் கொளலுமாம். ....1350
வடமெனும் பெயரால மரமும் கயிறும்
மணிவடப் பெயரும் வழங்குவர் புலவர். ....1351
வயமா வெனும்பெயர் வாசியும் யானையும்
சிங்கமும் புலியும் செப்பப் பெறுமே. ....1352

 

வலவை யெனும்பெயர் வஞ்சப் பெண்ணொடு

வெறியாட் டாளனும் வல்லோன் பெயருமாம். ....1303

 

வருட மெனும்பெயர் மழையும் யாண்டுமாம். ....1304

 

வன்னி யெனும்பெயர் ஒருமரப் பெயரும்

நெருப்புங் கிளியும் பிரம சாரியுமாம். ....1305

 

வயலெனும் பெயரே செய்யும் வெளியும்

மருத நன்னிலமும் வழங்கப் பெறுமே. ....1306

 

வசியெ னும்பெயர் வாளும் வடுவும்

வசிகமுங் கூர்மையும் வழங்கப் பெறுமே. ....1307

 

வடவை யெனும்பெயர் வடவா வனலும்

குதிரைப் பெட்டையு மதகரிப் பிடியும்

பெண்பா லெருமைப் பெயரும் பேசுவர். ....1308

 

வயமெனும் பெயரே வலிமையும் புனலும்

புட்பொதுப் பெயரும் புகலுவர் புலவர். ....1309

 

வழியெனும் பெயரே மரபுந் தொடர்ச்சியும்

தருமமு மிடமுந் தனையனும் நடவையும். ....1310

 

வஞ்சனை யெனும்பெயர் மாயையும் பொய்யும்

வஞ்சகப் பெயரும் வழங்கப் பெறுமே. ....1311

 

வரையெனும் பெயரே மலையு மூங்கிலும்

அளவுங் கைவரையு மாகு மென்ப. ....1312

 

வசதி யெனும்பெயர் மனையு மூரும்

சிறப்புறு மிடமும் செப்புவர் புலவர். ....1313

 

வயவன் எனும்பெயர் வலிமான் குருவியும்

விறலோன் காதலன் பெயரும் விளம்புவர். ....1314

 

வயாவெனும் பெயரே வருத்தமும் விருப்பமும்

நோயும் கருப்பமும் நுவலுவர் புலவர். ....1315

 

வள்ளெனும் பெயரே வல்லி பற்றிரும்பும்

கூர்மையுங் காதும் வகிர்தலும் கூறுவர். ....1316

 

வண்டெனும் பெயர்கை வளையும் குற்றமும்

பூசமும் சுரும்பும் புரியும் வெண்பணிலமும்

மாதர் விளையாடலும் அம்பும் வழங்கும். ....1317

 

வட்ட மெனும்பெயர் பாரா வளையமும்

பரிசையுந் திகிரியும் பரந்த கைமணியும்

வட்ட வடிவுந் தடாகமு நீர்ச்சாலுந்

துகிலு மூர்கோளுஞ் சொல்லுவர் புலவர். ....1318

 

வஞ்சி யெனும்பெயர் மாதுமோர் கொடியும்

பாவின் விகற்பமும் போர்மேற் செலவும்

மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. ....1319

 

வடுகெனும் பெயரே யிந்தள விசையும்

மருத யாழ்த்திறமும் வகுத்துரைத் தனரே. ....1320

 

வஞ்சக மெனும்பெயர் வாளுங் கபடுமாம். ....1321

 

வயிர மெனும்பெயர் வச்சிர மணியும்

மரத்தின் வயிரமும் வச்சிரா யுதமும்

சினமும் கூர்மையும் செப்புவர் புலவர். ....1322

 

வறிதெனும் பெயரே பயனில் வார்த்தையும்

சிறிதும் அறியாமையு மருகலுஞ் செப்புவர். ....1323

 

வம்பெனும் பெயரே மணமு மிடாவும்

நிலையின் மையு முலைக்கச்சும் புதுமையும். ....1324

 

வதுவை யெனும்பெயர் மணமும் கலியாணமும். ....1325

 

வழங்க லெனும்பெய ருலாவலு முரைத்தலும்

கொடுத்தலு மெனவே யறைந்தனர் புலவர். ....1326 

 

வலித்த லெனும்பெயர் நினைத்தலும் பேசலும். ....1327

 

வலம்புரி யெனும்பெயர் சலஞ்சலப் பெயரும்

நந்தியா வத்தமு நவிலப் பெறுமே. ....1328

 

வலவ னெனும்பெயர் வெற்றி யாளனும்

தேர்ப்பா கனுமெனச் செப்புவர் புலவர். ....1329

 

வள்ள மென்பெயர் மரக்காலும் வட்டிலும். ....1330

 

வக்கிர மெனும்பெயர் மடங்கலும் கொடுமையும்

வட்டமு மெனவே வழங்கப் பெறுமே. ....1331

 

வசந்த னெனும்பெயர் மதனுந் தென்காலுமாம். ....1332

 

வரியெனும் பெயர்நெற் பொதுவும் வாரியும்

எழுத்துஞ் சுணங்கு மின்னிசைப் பாடலும்

குடியிறைப் பெயரும் சந்தித் தெருவும்

நீளமு மெனவே நிகழ்த்துவர் புலவர். ....1333

 

வனமெனும் பெயரே யூர்சூழ் சோலையும்

நீருந் துழாயும் காடு மிகுதியும்

ஈரமு மெனவே யியம்பப் பெறுமே. ....1334

 

வடக மெனும்பெயர் வடக வுடையும்

தோலின் பெயரும் சொல்லப் பெறுமே. ....1335

 

வங்க மெனும்பெயர் வழுதுணைப் பெயரும்

வெள்ளீ யத்தினொடு தோணியும் விளம்புவர். ....1336

 

வசந்த மெனும்பெயர் வசந்த காலமும்

புரந்தரன் மாளிகை மணமும் புகலுவர். ....1337

 

வல்லி யெனும்பெயர் கொடியும் ஆய்ப்பாடியும்

நிகளமு மெனவே நிகழ்த்தப் பெறுமே. ....1338

 

வல்லெனும் பெயரே வலிமையும் விரைவும்

சூது மெனவே சொல்லுவர் புலவர். ....1339

 

வடுவெனும் பெயரே குற்றமும் சிறுமையும்

தழும்புஞ் சுரும்பொடு சோம்புங் காய்ப்

பிஞ்சுமாம். ....1340

 

வண்ண மெனும்பெயர் வடிவு மோசையும்

நிறங்களின் விகற்பமு நிகழ்த்தப் பெறுமே. ....1341

 

வயினெனும் பெயரே வயிறிட மனையுமாம். ....1342

 

வண்மை யெனும்பெயர் வளமையும் கொடுத்தலும்

வலிமையும் புகழும் வாய்மையும் வழங்கும். ....1343

 

வசுவெனும் பெயரே பொன்னும் கனலும்

எண்வகை யமரரும் பசுவின் கன்றுமாம். ....1344

 

வலமெனும் பெயரே கனமும் வெற்றியும்

இடமும் வலப்பாற் பெயரு மியம்புவர். ....1345

 

வன்மை யெனும்பெயர் வன்மையுங் காடும்

விரைவு மெனவே விளம்புவர் புலவர். ....1346

 

வளமெனும் பெயரே வனப்பும் பலவகை

வளமும் பதவியும் வழங்கப் பெறுமே. ....1347

 

வள்ளி யென்பெயர் கைவளையுங் கொடியுமாம். ....1348

 

வட்க லெனும்பெயர் நாணமும் கேடுமாம். ....1349

 

வரைதல் எனும்பெயர் நீக்கமும் கொளலுமாம். ....1350

 

வடமெனும் பெயரால மரமும் கயிறும்

மணிவடப் பெயரும் வழங்குவர் புலவர். ....1351

 

வயமா வெனும்பெயர் வாசியும் யானையும்

சிங்கமும் புலியும் செப்பப் பெறுமே. ....1352

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.