LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- வட மலை நிகண்டு

வகர இகர வருக்கம்

 

விண்டெனும் பெயரே மேகமும் மூங்கிலும்
மாயனும் காற்றும் மலையும் விளம்புவர். ....1376
விசும்பெனும் பெயரே விண்ணுஞ் சுவர்க்கமும்
மேகமுந் திசையும் விளம்பப் பெறுமே. ....1377
விசைய மெனும்பெயர் வென்றியி னொடுசர்க்
கரையுங் கதிர்மண் டலமுங் கருதுவர். ....1378
விழவெனும் பெயரே மிதுன ராசியும்
உத்சவப் பெயரு முரைக்கப் பெறுமே. ....1379
விடமெனும் பெயரே நஞ்சுந் தேளும்
ஒருமரப் பெயரு முரைத்தனர் புலவர். ....1380
விடரெனும் பெயரே வெற்பின் முழையும்
கமருந் தவத்தோ ரிடமும் காடுமாம். ....1381
விளவெனும் பெயரே விளமரமும் கமருமாம். ....1382
விடங்க மெனும்பெயர் வீதிக் கொடியும்
ஆண்மையு மழகும் கொடுங்கையு மனையின்
முகடு மெனவே மொழிந்தனர் புலவர். ....1383
விடலை யெனும்பெயர் விறலோன் பெயரும்
தலைவன் பெயரும் சாற்றுவர் புலவர். ....1384
விழைந்தோ னெனும்பெயர் வேட்டோ ன் பெயரும்
கொண்கனு மெனவே கூறப் பெறுமே. ....1385
விலோத மெனும்பெயர் பெண்பான் மயிரும்
மியிர்ச்சுரு ளும்மென வழங்குவர் புலவர். ....1386
விறலெனும் பெயரே வென்றியும் பலமுமாம். ....1387
விதப்பெனும் பெயரே மிகுதியும் பெலமுமாம். ....1388
விறப்பெனும் பெயரே யச்சமும் பெலமும்
செறிவு மெனவே செப்புவர் புலவர். ....1389
வியப்பெனும் பெயர்சினக் குறிப்புஞ் சினமும்
அதிசயப் பெயரு மாகு மென்ப. ....1390
விழைச்செனும் பெயரே விருப்பு நல்லிளமையும்
புணர்ச்சி யனுபோகப் பெயரும் புகலுவர். ....1391
விடையெனும் பெயரெதிர் மொழியு மெருது
மேவுதற் பெயரும் இயம்புவர் புலவர். ....1392
விந்த மென்பெயர் தாமரையு மோர்கிரியுமாம். ....1393
விம்ம லெனும்பெயர் ஒலித்தலும் அழுகையும். ....1394
வியலெனும் பெயரே பெருமையும் அகலமும். ....1395
விபுல மெனும்பெயர் பெருமையும் அகலமும். ....1396
வில்லெனும் பெயரே மூல நாளும்
ஒளியும் வார்சிலையு முரைக்கப் பெறுமே. ....1397
விதியெனும் பெயரே பிரமனுந் தொழிலும்
இயல்புமூழ் முறையு மியம்பப் பெறுமே. ....1398
விருகோ தரனெனும் பெயர்யம ராயனும்
வீமன் பெயரும் விளம்பப் பெறுமே. ....1339
வித்த மெனும்பெயர் அறிவும் கனகமும்
பழித்தலு மெனவே பகரப் பெறுமே. ....1400
விளிவெனும் பெயரே வீதலும் கேடுமாம். ....1401
விருத்தி யெனும்பெயர் விரித்திடு பொருளும் 
தன்றொழி லிலாபமும் ஆக்கத்தின் பெயருமாம். ....1402
விபூதி யெனும்பெயர் செல்வமு நீறும்
கொடுமையுந் தசையுங் குற்றமு நரகுமாம். ....1403
விடப மெனும்பெயர் மரக்கொம்புங் காளையும்
இடப ராசியும் இயம்புவர் புலவர். ....1404
விளரி யெனும்பெயர் வேட்கையின் மிகுதியும்
இளமையும் யாழிலோர் நரம்பும் யாழுமாம். ....1405
விழும மெனும்பெயர் சீர்மையும் சிறப்பும்
இடும்பையு மெனவே யியம்பப் பெறுமே. ....1406
விளரெனும் பெயரே வெளுப்பு மிளமையுங்
கொழுப்பு மெனவே கூறுவர் புலவர். ....1407
விண்ணெனும் பெயரே விசும்பு மேகமுமாம். ....1408
விரையெனும் பெயரே சாந்தும் தூமமும்
மணமு மெனவே வழங்கப் பெறுமே. ....1409
வியாள மெனும்பெயர் அரவும் புலியுமாம். ....1410
விலங்கெனும் பெயரே மிருகமுந் தளையுமாம். ....1411
விநாயக னெனும்பெயர் விறற்கரி முகனும்
அருகனும் புத்தனு மாகு மென்ப. ....1412

 

விண்டெனும் பெயரே மேகமும் மூங்கிலும்

மாயனும் காற்றும் மலையும் விளம்புவர். ....1376

 

விசும்பெனும் பெயரே விண்ணுஞ் சுவர்க்கமும்

மேகமுந் திசையும் விளம்பப் பெறுமே. ....1377

 

விசைய மெனும்பெயர் வென்றியி னொடுசர்க்

கரையுங் கதிர்மண் டலமுங் கருதுவர். ....1378

 

விழவெனும் பெயரே மிதுன ராசியும்

உத்சவப் பெயரு முரைக்கப் பெறுமே. ....1379

 

விடமெனும் பெயரே நஞ்சுந் தேளும்

ஒருமரப் பெயரு முரைத்தனர் புலவர். ....1380

 

விடரெனும் பெயரே வெற்பின் முழையும்

கமருந் தவத்தோ ரிடமும் காடுமாம். ....1381

 

விளவெனும் பெயரே விளமரமும் கமருமாம். ....1382

 

விடங்க மெனும்பெயர் வீதிக் கொடியும்

ஆண்மையு மழகும் கொடுங்கையு மனையின்

முகடு மெனவே மொழிந்தனர் புலவர். ....1383

 

விடலை யெனும்பெயர் விறலோன் பெயரும்

தலைவன் பெயரும் சாற்றுவர் புலவர். ....1384

 

விழைந்தோ னெனும்பெயர் வேட்டோ ன் பெயரும்

கொண்கனு மெனவே கூறப் பெறுமே. ....1385

 

விலோத மெனும்பெயர் பெண்பான் மயிரும்

மியிர்ச்சுரு ளும்மென வழங்குவர் புலவர். ....1386

 

விறலெனும் பெயரே வென்றியும் பலமுமாம். ....1387

 

விதப்பெனும் பெயரே மிகுதியும் பெலமுமாம். ....1388

 

விறப்பெனும் பெயரே யச்சமும் பெலமும்

செறிவு மெனவே செப்புவர் புலவர். ....1389

 

வியப்பெனும் பெயர்சினக் குறிப்புஞ் சினமும்

அதிசயப் பெயரு மாகு மென்ப. ....1390

 

விழைச்செனும் பெயரே விருப்பு நல்லிளமையும்

புணர்ச்சி யனுபோகப் பெயரும் புகலுவர். ....1391

 

விடையெனும் பெயரெதிர் மொழியு மெருது

மேவுதற் பெயரும் இயம்புவர் புலவர். ....1392

 

விந்த மென்பெயர் தாமரையு மோர்கிரியுமாம். ....1393

 

விம்ம லெனும்பெயர் ஒலித்தலும் அழுகையும். ....1394

 

வியலெனும் பெயரே பெருமையும் அகலமும். ....1395

 

விபுல மெனும்பெயர் பெருமையும் அகலமும். ....1396

 

வில்லெனும் பெயரே மூல நாளும்

ஒளியும் வார்சிலையு முரைக்கப் பெறுமே. ....1397

 

விதியெனும் பெயரே பிரமனுந் தொழிலும்

இயல்புமூழ் முறையு மியம்பப் பெறுமே. ....1398

 

விருகோ தரனெனும் பெயர்யம ராயனும்

வீமன் பெயரும் விளம்பப் பெறுமே. ....1339

 

வித்த மெனும்பெயர் அறிவும் கனகமும்

பழித்தலு மெனவே பகரப் பெறுமே. ....1400

 

விளிவெனும் பெயரே வீதலும் கேடுமாம். ....1401

 

விருத்தி யெனும்பெயர் விரித்திடு பொருளும் 

தன்றொழி லிலாபமும் ஆக்கத்தின் பெயருமாம். ....1402

 

விபூதி யெனும்பெயர் செல்வமு நீறும்

கொடுமையுந் தசையுங் குற்றமு நரகுமாம். ....1403

 

விடப மெனும்பெயர் மரக்கொம்புங் காளையும்

இடப ராசியும் இயம்புவர் புலவர். ....1404

 

விளரி யெனும்பெயர் வேட்கையின் மிகுதியும்

இளமையும் யாழிலோர் நரம்பும் யாழுமாம். ....1405

 

விழும மெனும்பெயர் சீர்மையும் சிறப்பும்

இடும்பையு மெனவே யியம்பப் பெறுமே. ....1406

 

விளரெனும் பெயரே வெளுப்பு மிளமையுங்

கொழுப்பு மெனவே கூறுவர் புலவர். ....1407

 

விண்ணெனும் பெயரே விசும்பு மேகமுமாம். ....1408

 

விரையெனும் பெயரே சாந்தும் தூமமும்

மணமு மெனவே வழங்கப் பெறுமே. ....1409

 

வியாள மெனும்பெயர் அரவும் புலியுமாம். ....1410

 

விலங்கெனும் பெயரே மிருகமுந் தளையுமாம். ....1411

 

விநாயக னெனும்பெயர் விறற்கரி முகனும்

அருகனும் புத்தனு மாகு மென்ப. ....1412

 

by Swathi   on 20 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.