சங்க இலக்கியத்திலுள்ள(Tamil Literature) பதினெட்டு நூல்களில், பன்னிரெண்டு நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான வைதேகி ஹெர்பர்ட்(Vaidehi Herbert) அவர்களுக்கு கனடாவின் டொரண்டோ பல்கலைகழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் சிறப்பு விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ் இலக்கியங்களை(Tamil Literature) ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது பற்றி அவரிடம் கேட்ட போது, தற்போது வழக்கத்தில் இல்லாத எத்தனையோ சொற்கள் தமிழ் இலக்கியத்தில் பல உள்ளன. அந்த சொற்களை மொழி பெயர்ப்பது மற்ற இலக்கிய மொழிபெயர்ப்புகளை விட மிகவும் சிக்கலும் சிரமமுமான ஒன்று என அவர் கூறினார். உதாரணமாக தமிழ் இலக்கியத்தில் உள்ள விறலி எனும் சொல்லுக்கு நேரடியாக ஆங்கிலத்தில் ஒப்பான சொல் இல்லை என்றும் அப்படியான வார்த்தைகளை மொழிபெயர்ப்பு செய்யும் போது கூடுதல் சிரமங்கள் ஏற்பட்டதாக அவர் மேலும் கூறுகிறார். இதுவரை சங்க இலக்கியத்தின்(Tamil Literature) பன்னிரெண்டு படைப்புகளை மொழிபெயர்த்துள்ள வைதேகி(Vaidehi Herbert) இதர ஆறு படைப்புகளையும் அடுத்த ஆண்டு(2014) இறுதிக்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிள்ளார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருந்தாலும் தமிழ் இலக்கியங்கள் வளம் பெற தமிழக அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
|