LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

வைத்தீஸ்வரன்கோவில் நாடி ஜோதிடம் உண்மையா?

ஜாதகம் அல்லது நாடி ஜோதிடம் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை  என்பதும், நம் பிறப்பு, உடல்நலம் ஆகியவை  நம்மை சுற்றியுள்ள கோள்களின் பாதிப்பு இல்லாமல் இயங்கமுடியாது என்பதும் பல அனுபவங்களின் வாயிலாக, பல நூல்களின் வாயிலாக அறியமுடிகிறது.

 

அனால் அதை சாதாரண மனிதர்களால் இன்னொருவரின் ஜாதகத்தையோ, கைரேகையையோ எளிதாகக் கணிக்க முடியாது.  சில தன்னலமற்ற ஆன்ம பலம் உள்ள மனிதர்களால் நம் பிறப்பின் சில விஷயங்களை அறியமுடியும்.  அதற்கு  அவர்கள் நம் பிறந்த நாள், நேரம் போன்ற விபரங்கள் அல்லது நம் கைரேகை விபரங்கள் கொண்டோ சிலவற்றை கணிக்கிறார்கள். 

 

அனைத்தும் பணத்திற்காகவும், வியாபார நோக்குடனும் இயங்கும் இந்நாளில் வைத்தீஸ்வரன்கோவிலில் பல இடங்களில், கோவிலை சுற்றி பல ஏமாற்றுப் பேர்வழிகள் பலர் நாடி ஜோதிடம் வைத்திருக்கிறார்கள். கோவிலில் பெரும்பாலான கடைகள் இவர்களின் புரோக்கர்கள்.  நீங்கள் ஏதேனும் வாங்கியவுடன், நாடி ஜோதிடம் பார்க்கவேண்டுமா இங்கே செல்லுங்கள், அங்கே செல்லுங்கள் என்று சொல்லி அருகில் உள்ள நாடி ஜோதிட நிலையத்திற்கு அழைத்துச் செல்வார்.  அவர்கள் ரூபாய் 300  முதல்  1000 வரை பிடுங்கி விடுவார்கள்.  பெரும்பாலானவை இங்கு ஏமாற்றுப் பேர்வழிகளால் நடத்தப்படுகிறது. நீங்கள் காரை விட்டு இறங்கியவுடன், ஒருவர் உங்களிடம் வந்து பூ பழம் அந்த கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்பார். மேலும் , நிறைய பேர் நாடி ஜோதிடம் சொல்லி ஏமாற்றுவதால் இந்து அறநிலையத் துறை மூலம் இந்த நாடி ஜோதிடம் கோவிலிலேயே இயங்குகிறது என்பார்.  எதையும் நம்பாதீர்கள்.  வைத்தீஸ்வரன் கோவில் அறநிலையக் கட்டுப்பாட்டில் இல்லை. அது தருமபுரம் மடத்திற்கு சொந்தமானது.  உங்கள் பெயர் கண்டுபிடிபதாகச் சொல்லி அனைத்து விபரங்களையும் கறந்து விடுவார்கள்.  இந்த மோசடி குறித்து, அவர்கள் எப்படி ஓலை தயாரிக்கிறார்கள் என்பது குறித்து தமிழின் பல தொலைக்காட்சிகளில் விரிவாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார்கள்.

 

 

                                                      -இலக்கியன் 

by Swathi   on 23 Jan 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா? மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
கருத்துகள்
03-Jul-2016 18:53:56 ஸ்ரீதர் M said : Report Abuse
ஜயா வணக்கம் நான் நாடி ஜோதிடம் பார்த்துளேன் சில கருத்துகள் உண்மையா காயம் போலியாக சொல்லுகிறார்கள் யார் உண்மையாக நாடி ஜோதிடம் பார்ப்பார் அவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி சொல்லுங்கள் 8438483600 7708225111
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.