|
||||||||
வைத்தீஸ்வரன்கோவில் நாடி ஜோதிடம் உண்மையா? |
||||||||
ஜாதகம் அல்லது நாடி ஜோதிடம் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை என்பதும், நம் பிறப்பு, உடல்நலம் ஆகியவை நம்மை சுற்றியுள்ள கோள்களின் பாதிப்பு இல்லாமல் இயங்கமுடியாது என்பதும் பல அனுபவங்களின் வாயிலாக, பல நூல்களின் வாயிலாக அறியமுடிகிறது.
அனால் அதை சாதாரண மனிதர்களால் இன்னொருவரின் ஜாதகத்தையோ, கைரேகையையோ எளிதாகக் கணிக்க முடியாது. சில தன்னலமற்ற ஆன்ம பலம் உள்ள மனிதர்களால் நம் பிறப்பின் சில விஷயங்களை அறியமுடியும். அதற்கு அவர்கள் நம் பிறந்த நாள், நேரம் போன்ற விபரங்கள் அல்லது நம் கைரேகை விபரங்கள் கொண்டோ சிலவற்றை கணிக்கிறார்கள்.
அனைத்தும் பணத்திற்காகவும், வியாபார நோக்குடனும் இயங்கும் இந்நாளில் வைத்தீஸ்வரன்கோவிலில் பல இடங்களில், கோவிலை சுற்றி பல ஏமாற்றுப் பேர்வழிகள் பலர் நாடி ஜோதிடம் வைத்திருக்கிறார்கள். கோவிலில் பெரும்பாலான கடைகள் இவர்களின் புரோக்கர்கள். நீங்கள் ஏதேனும் வாங்கியவுடன், நாடி ஜோதிடம் பார்க்கவேண்டுமா இங்கே செல்லுங்கள், அங்கே செல்லுங்கள் என்று சொல்லி அருகில் உள்ள நாடி ஜோதிட நிலையத்திற்கு அழைத்துச் செல்வார். அவர்கள் ரூபாய் 300 முதல் 1000 வரை பிடுங்கி விடுவார்கள். பெரும்பாலானவை இங்கு ஏமாற்றுப் பேர்வழிகளால் நடத்தப்படுகிறது. நீங்கள் காரை விட்டு இறங்கியவுடன், ஒருவர் உங்களிடம் வந்து பூ பழம் அந்த கடையில் வாங்கிக் கொள்ளுங்கள் என்பார். மேலும் , நிறைய பேர் நாடி ஜோதிடம் சொல்லி ஏமாற்றுவதால் இந்து அறநிலையத் துறை மூலம் இந்த நாடி ஜோதிடம் கோவிலிலேயே இயங்குகிறது என்பார். எதையும் நம்பாதீர்கள். வைத்தீஸ்வரன் கோவில் அறநிலையக் கட்டுப்பாட்டில் இல்லை. அது தருமபுரம் மடத்திற்கு சொந்தமானது. உங்கள் பெயர் கண்டுபிடிபதாகச் சொல்லி அனைத்து விபரங்களையும் கறந்து விடுவார்கள். இந்த மோசடி குறித்து, அவர்கள் எப்படி ஓலை தயாரிக்கிறார்கள் என்பது குறித்து தமிழின் பல தொலைக்காட்சிகளில் விரிவாக படம்பிடித்து வெளியிட்டுள்ளார்கள்.
-இலக்கியன் |
||||||||
by Swathi on 23 Jan 2013 1 Comments | ||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|