செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)
நீச்சல்காரன்
- நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தும், மண்சரிவும் ஏற்பட்டது
- அரசியல் விளம்பரங்களுக்கு நவம்பர் 22 முதல் ட்விட்டரில் தடை
- இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா அக்டோபர் 31 இல் காலமானார்
- காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம்: முதல் முறையாகத் தமிழகத்தில் தொடங்கியது
- நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் மரணம்
- துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார்.
- பயிர்க்கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்தது.
- டிசம்பர் 1-ம் தேதி முதல், அனைத்துச் சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்ட் டேக்(Fasttag) மூலம் கட்டணம் வசூலிக்க அறிவிப்பு வெளியாகியது
- சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், 50% சலுகைக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 5 இராஜராஜ சோழனின் 1034 ஆவது சதயவிழா நிகழ்வுகள் தஞ்சை பெரிய கோயிலில் நடந்தது
- தென்னிந்தியாவின் முதல் விமான நிலையத் தீயணைப்பு வீராங்கனையாக ரெம்யா என்பவர் சென்னை விமான நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்
- இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று 8-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- சென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டுத் தற்கொலை
- நவம்பர் 10 முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்
- 3 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனது முதல் கதை சொல்லும் போட்டியை சி.பி.எஸ்.இ.அறிவித்துள்ளது.
- காதுகேளாதோர், வாய் பேசமுடியாதோர் மற்றும் தொழுநோயாளிகள் இனி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- கோவையில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய நான்கு இளைஞர்கள் மீது ரயில்மோதி நால்வரும் உயிரிழந்தனர்.
- ஆறு மாதங்களுக்கும் மேலாக முயற்சி செய்து ஊருக்குள் சுற்றி வந்த அரிசி ராஜா என்ற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முகாமில் விட்டனர்
- தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
- சந்திரயான் 3 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
- 'ஆர்க்டிக் பிளாஸ்ட்' என்ற குளிர்க்காற்று வீசுவதால் அமெரிக்காவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்குக் குளிர் நிலவுகிறது.
- பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தின்படி மாணவர்கள் மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் பொருட்களைக் கொடுத்தால் அதற்கு நிகரான மதிப்புள்ள பொருள்கள் வழங்கும் திட்டத்தைத் திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்தார்.
- தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
- உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும் கொலீஜியம் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் உச்சநீதிமன்ற நீதிபதியுமான ஆர்.பானுமதி இடம்பெற்றுள்ளார்.
- கரூர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்குப் பல விருதுகளை வாங்கித் தந்த தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனுக்கு நன்றிக்கடனாக, பள்ளி வளர்ச்சிக்காக இருபத்தைந்து லட்சத்தை அக்கிராம மக்கள் வழங்கினர்.
- இந்திய அரசின் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதைக் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் கீதா பெற்றார்.
- தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஷூ வழங்க அரசாணை வெளியீடு.
- தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் பாலசிங் மறைவு.
- நாட்டிலேயே ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக அதிக உதவி மையங்களை அமைத்துப் பராமரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
- இந்தியாவைச் சேர்ந்த பதின்ம வயதினர் பிறநாடுகளின் பதின்ம வயதினரைவிட சுறுசுறுப்பாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
- சுங்கச்சாவடிகளில் மின்னணுக் கட்டணமுறைக்கு ஏதுவாக இந்தியா முழுதும் டிசம்பர் மாதம் முதல் நான்குச் சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
- மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்குத் தனிப்பிரிவு தொடக்கம்
|