|
|||||
தமிழோடு விளையாடு |
|||||
தமிழோடு விளையாடு
ந.செல்லம்மாள் ஜானகிராமன், மிச்சிகன்,அமெரிக்கா
ஆதி எழுத்து இல்லையெனிலோர் சிறார் கதைத் தொகுப்பின் பின்பகுதி; ஒரு காட்டு விலங்கின் குணாதிசயத்துடனும் ஒப்பிடுவர்; இரண்டிலிருந்து நான்கு வரை சேர்ந்தது காலத்தே தேய்ந்தவோர் தகவல் பரிமாற்றம்; சில இசைக் கருவிகளிலும் காணப்படும்; கடை மூன்றெழுத்து காத்தலாகும்; ஆறும் இருந்தால் அடிமைத்தனமற்ற அகிலத்தில் இதனைப் பற்றிக் கொண்டு கோலோச்சலாம்...இது என்ன ?
ஆதி எழுத்து வருதலின் வினையைக் குறிக்கும். ஈற்றானது இரண்டிருக்கும் ஓரெழுத்துறுப்பு; முதலுமிரண்டுமிணைந்தால் வினைச்சொல்லின் தொழிற்பெயர்; ஆதியுமந்தமும் சங்கமித்தால் தோல்வியென்பதில்லை; நான்குமிருந்தால் மானுடப் பிறப்பிலிருந்து இறப்புவரையிலுள்ள நிகழ்வுகளின் தொகுப்பு. நான் யார்?
முதல் மூன்றும் சுத்தமாக இருந்தால் வையமும் வாழ்த்தும் வாழ்பவரை; கடையெழுத்திருந்தால் கதாசிரியருக்குக் காப்பியக் காவியங்களும் கைகூடும்; ஐந்தும் ஐக்கியமானால் ஈகை அற்றோர்க்கும் ஈரொன்பது நிரம்பினால் கிடைக்கும். அது என்ன?
விடை:
1.சுதந்திரம் |
|||||
by Swathi on 11 Dec 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|