LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    வலைத்தமிழ் நிகழ்வுகள் Print Friendly and PDF

டிசம்பர் 28, சென்னை தி.நகரில் நடந்த மார்கழி இசைவிழாவில் வலைத்தமிழ் கல்விக்கழகத்தின் ஐந்து பாட நூல்களும் காணொளி களும் வெளியீடு

டிசம்பர் 28, சென்னை தி.நகரில் நடந்த இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை 18ம் ஆண்டு மார்கழி இசைவிழாவில் தமிழ்மொழி-கலை -பண்பாடு சார்ந்த இணையவழி பயிற்சியை வழங்கும் வலைத்தமிழ் கல்விக்கழகத்தின் (www.ValaiTamilAcademy.org) தமிழிசை பாடநூல் -1, 2 , பண்ணிசைப் பயிற்சி நூல் -1, பேச்சுத்தமிழ் -1, 2 ஆகிய ஐந்து பாட நூல்களையும் , 25 பாடல்கள் அடங்கிய தமிழிசை காணொளி ஆகியவற்றை பல்துறை சார்ந்த , பல நாடுகளைச் சார்ந்த ஆளுமைகள் கலந்துகொண்டு வெளியிட்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் சத்தியவேல் முருகனார், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் திரு.காந்தி,IRPFS , திரைப்பட இசையமைப்பாளர் திரு.ஜேம்ஸ் வசந்தன், வள்ளுவர் குரல் குடும்பம் மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் தலைவர் திரு.சி .இராஜேந்திரன் IRS (ஓய்வு) , ஆஸ்திரேலியா தமிழ் கலைகள் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் திரு.லாரன்ஸ் அண்ணாதுரை, மலேசியாவிலிருந்து திரு.குணபதி ஆறுமுகம், அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க இயக்குனர் திரு.கொழந்தைவேல் ராமசாமி, எக்ஸ்னோரா தலைவர் திரு.செந்தூர்பாரி, புதுச்சேரி பேராசிரியர் முனைவர். மு.இளங்கோவன் , பேராசிரியர் - தொழிலதிபர் திரு.பழனி பெரியசாமி, தொழிலதிபர் திரு.தம்பிக்கலைஞன் , பேராசிரியர் சித்தமருத்துவர் அன்புகணபதி ,வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மேனாள் தலைவர் முனைவர்.அரசு செல்லையா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பாடத்திட்டதை நேர்த்தியாக வடிவமைத்த இன்னிசையேந்தல் திருபுவனம் குரு.ஆத்மநாதன், இசையறிஞர் நா.மம்மது, முனைவர். ரங்கநாயகி சச்சிதானந்தம் , திருமதி. வசந்தி ராஜராஜன், திரு.ராஜராஜன் உள்ளிட்ட பலரும் சிறப்பிக்கப்பட்டனர்.

வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். உலக அளவின் தமிழ் மொழி, தமிழிசையின் வளர்ச்சி குறித்தும், வலைத்தமிழ் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்தும் விருந்தினர்கள் குறிப்பிட்டு பேசினர்.

2022-ஆம் ஆண்டின் இறுதியில் ஆன்றோர் பெருமக்கள் ஒரே மேடையில் கலந்துகொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வாக இது அமைந்தது. உலகத் தமிழர்களுக்கு தொடர்ந்து தமிழிசை உள்ளிட்ட பல பயிற்சியை எளிமையாகக் கொண்டுசேர்க்கும் சேவையை வலைத்தமிழ் கல்விக்கழகம் துறைசார்ந்த அறிஞர் பெருமக்களைக்கொண்டு வழங்குவதை அனைவரும் காலத்தின் தேவையாக வாழ்த்தி வரவேற்றனர்.



 

by Swathi   on 30 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழை ஐநா சபை, யுனெசுகோ ஆகியவற்றில் கொண்டுசென்று அணைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும்- வலைத்தமிழ் சா. பார்த்தசாரதி வேண்டுகோள். தமிழை ஐநா சபை, யுனெசுகோ ஆகியவற்றில் கொண்டுசென்று அணைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும்- வலைத்தமிழ் சா. பார்த்தசாரதி வேண்டுகோள்.
வலைத்தமிழ் கல்விக்கழகம் சார்பில் இணையவழி இசை பயின்ற இசைக்குயில்களின் மார்கழி அரங்கேற்றம் வலைத்தமிழ் கல்விக்கழகம் சார்பில் இணையவழி இசை பயின்ற இசைக்குயில்களின் மார்கழி அரங்கேற்றம்
வலைத்தமிழில் முனைவர் மருதநாயகதின் முதல் காணொலி. வலைத்தமிழில் முனைவர் மருதநாயகதின் முதல் காணொலி.
சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் நூல்களைப் பெற estore.valaitamil.com தொடங்கப்பட்டுள்ளது சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் நூல்களைப் பெற estore.valaitamil.com தொடங்கப்பட்டுள்ளது
சித்தமருத்துவ மருத்துவர்களுக்கு தொழில்நுட்ப உதவிக்கு சிறப்புக் குழு ஏற்படுத்தியுள்ளது SiddhaMD அமைப்பு சித்தமருத்துவ மருத்துவர்களுக்கு தொழில்நுட்ப உதவிக்கு சிறப்புக் குழு ஏற்படுத்தியுள்ளது SiddhaMD அமைப்பு
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய இயக்குநருடன் வலைத்தமிழ் கல்விக்கழக நிறுவனர் சந்திப்பு.. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய இயக்குநருடன் வலைத்தமிழ் கல்விக்கழக நிறுவனர் சந்திப்பு..
நியூஜெர்சியில் வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல் வெளியீடு நியூஜெர்சியில் வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல் வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3 வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.