|
||||||||
வழிகாட்டிய வள்ளல் |
||||||||
சார் … சார் ..- எதிரே வந்த வயதானவரை நிறுத்தினார் சேகர் . “ ஏன் .. என்னப்பா ?” என்றபடி நின்றார் பெரியவர் . “ சார் ராமசாமி வீடு எந்தப் பக்கம் ?” “ நேரே வலது புறம்போய் … பிறகு இடது புறம் திரும்புங்க அங்கே ஒரு ஆலமரம் இருக்கும் . அதன் எதிர்புறம்போய் வடக்கே ஒரு ரோடு பிரியும் . அதுலே போங்க . ஒரு கோவில் இருக்கும் . மேற்கே திரும்புங்க . கடைத்தெரு வரும் . அதில் ஒரு டீக்கடை இருக்கும் . “ அங்கே தான் ராமசாமி வீடா ?” “ தெரியாது எனக்கு . நான் ஊருக்குப் புதுசு . அந்த டீக்கடையில் நிறைய பேர் இருப்பாங்க . அவங்க கிட்டே கேட்டா யாராவது நிச்சயம் உங்களுக்கு வழி சொல்வாங்க .” இப்படிக் குழப்பத்துடன் வழிகாட்டும் மக்கள் அதிகம் பேர் உண்டு . வழிகாட்டுவதில் வள்ளலாகத் திகழ்ந்தார் பெருந்தலைவர் . அகில இந்திய காங்கிரஸ் தலைவரானதும் நாடெங்கிலும்பெருந்தலைவர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் . மக்கள் அவரை காலா காந்தி ( கருப்பு காந்தி ) என்று அழைத்து மகிழ்ந்தனர் . பஞ்சாப் , நேபாள எல்லை , ஒரிசா , உத்திர பிரதேசம் , ஆந்திரா , மைசூர் என்று தனது பயணத் திட்டங்களை மேற்கொண்டார் . 1956 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் தமிழகத்திற்கு வந்தார் . அந்தப் பயணம் சமதர்ம யாத்திரை என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது . இந்தப் பயணத்தில் காமராசர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் . என்னுடைய சமதர்ம சமுதாய அமைப்புப் போராட்டம் இதுதான் . இந்த இறுதிப்போரில் குதிக்க நான் முடிவு செய்து விட்டேன் . பொதுமக்களே உங்களுடைய ஆதரவு எனக்குத் தேவை . தருவீர்களா ? என்று கேட்டார் . லட்சக்கணக்கான மக்கள் “ தருகிறோம் . தருகிறோம் ” என்று எழுந்து நின்று முழங்கினர் . இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சி 18 ஆம் நாள் சுற்றுப் பயணத்தின்போதுதான் நடந்தது . அதனால் இந்த சுற்றுப் பயணம் புனித யாத்திரை என்று அழைக்கப்பட்டது . 18 நாள்கள் , 300 ஊர்கள் , 200 மைல்கள் , 1 கோடி மக்கள் என விரிந்தன . இந்த சமதர்மயாத்திரை பற்றி புள்ளி விபரங்கள் . இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒரு நாளைக்கு இருபது , முப்பது ஊர்களுக்குச்சென்ற தலைவர் குறைந்தது 15 சிறிய கூட்டங்களிலும் , 5 பெரிய கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசினார் . இந்தக் கூட்டங்களில்பெருந்தலைவர்முதலில் சமதர்ம தத்துவத்தைப்பற்றிப் பொதுப்படையான விளக்கம்அளித்தார் . பின்னர் அந்தச் சமுதாய அமைப்பிற்கு எதிரிகள் , எதிர்ப்புச் சக்திகள் , அவற்றைச் சமாளிக்கும் முறை குறித்து விளக்கினார் . அவரது பேச்சில் சிறந்த உண்மை மின்னி மக்களுக்குப் புத்துணர்வு ஊட்டியது . |
||||||||
by Swathi on 02 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|