LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

வழிகாட்டிய வள்ளல்

சார் … சார் ..- எதிரே வந்த வயதானவரை நிறுத்தினார் சேகர் .

ஏன் .. என்னப்பா ?” என்றபடி நின்றார் பெரியவர் .

சார் ராமசாமி வீடு எந்தப் பக்கம் ?”

நேரே வலது புறம்போய் … பிறகு இடது புறம் திரும்புங்க அங்கே ஒரு ஆலமரம் இருக்கும் . அதன் எதிர்புறம்போய் வடக்கே ஒரு ரோடு பிரியும் . அதுலே போங்க . ஒரு கோவில் இருக்கும் . மேற்கே திரும்புங்க . கடைத்தெரு வரும் . அதில் ஒரு டீக்கடை இருக்கும் .

அங்கே தான் ராமசாமி வீடா ?”

தெரியாது எனக்கு . நான் ஊருக்குப் புதுசு . அந்த டீக்கடையில் நிறைய பேர் இருப்பாங்க . அவங்க கிட்டே கேட்டா யாராவது நிச்சயம் உங்களுக்கு வழி சொல்வாங்க .”

இப்படிக் குழப்பத்துடன் வழிகாட்டும் மக்கள் அதிகம் பேர் உண்டு . வழிகாட்டுவதில் வள்ளலாகத் திகழ்ந்தார் பெருந்தலைவர் .

அகில இந்திய காங்கிரஸ் தலைவரானதும் நாடெங்கிலும்பெருந்தலைவர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் . மக்கள் அவரை காலா காந்தி ( கருப்பு காந்தி ) என்று அழைத்து மகிழ்ந்தனர் . பஞ்சாப் , நேபாள எல்லை , ஒரிசா , உத்திர பிரதேசம் , ஆந்திரா , மைசூர் என்று தனது பயணத் திட்டங்களை மேற்கொண்டார் . 1956 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் தமிழகத்திற்கு வந்தார் . அந்தப் பயணம் சமதர்ம யாத்திரை என்று தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது . இந்தப் பயணத்தில் காமராசர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் .

என்னுடைய சமதர்ம சமுதாய அமைப்புப் போராட்டம் இதுதான் . இந்த இறுதிப்போரில் குதிக்க நான் முடிவு செய்து விட்டேன் . பொதுமக்களே உங்களுடைய ஆதரவு எனக்குத் தேவை . தருவீர்களா ? என்று கேட்டார் . லட்சக்கணக்கான மக்கள் தருகிறோம் . தருகிறோம் ” என்று எழுந்து நின்று முழங்கினர் . இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சி 18 ஆம் நாள் சுற்றுப் பயணத்தின்போதுதான் நடந்தது . அதனால் இந்த சுற்றுப் பயணம் புனித யாத்திரை என்று அழைக்கப்பட்டது .

18 நாள்கள் , 300 ஊர்கள் , 200 மைல்கள் , 1 கோடி மக்கள் என விரிந்தன . இந்த சமதர்மயாத்திரை பற்றி புள்ளி விபரங்கள் .

இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒரு நாளைக்கு இருபது , முப்பது ஊர்களுக்குச்சென்ற தலைவர் குறைந்தது 15 சிறிய கூட்டங்களிலும் , 5 பெரிய கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசினார் .

இந்தக் கூட்டங்களில்பெருந்தலைவர்முதலில் சமதர்ம தத்துவத்தைப்பற்றிப் பொதுப்படையான விளக்கம்அளித்தார் . பின்னர் அந்தச் சமுதாய அமைப்பிற்கு எதிரிகள் , எதிர்ப்புச் சக்திகள் , அவற்றைச் சமாளிக்கும் முறை குறித்து விளக்கினார் . அவரது பேச்சில் சிறந்த உண்மை மின்னி மக்களுக்குப் புத்துணர்வு ஊட்டியது .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.