கல்வி கற்றலும், கற்றபின்,தேர்ச்சியும், தேறிய பின் பட்டமும், பட்டயமும், அத்தனையும் வாங்கிய பின் வாழ்க்கையில் வருமானத்தை தேட !.
உடன் ஒரு சிபரிசும் பெற்று, வேலைக்கு சேர்ந்து, வருமானத்தை வாங்கிய பின் அவனுக்கு,அல்லது அவளுக்கு, ஒரு துணை தேவை என்று !
ஜாதகமும்,சொத்து விவரமும் காண்பித்து, மணமுடித்து அவர்களிருவரின் இணையால் தோன்றிவிடும் உயிருக்கு ஊட்டப்படும் தாய்ப்பாலும், உணவும் அவர்களை மீண்டும்!
ஒரு சுழற்சிக்கு கொண்டு சென்று, கல்வி கற்றலும்,கற்றபின் தேர்ச்சியும்.... இந்த சுழற்சிகளுக்கு இடையில்தான் அத்தனை சந்தோசங்களும்!.
அனைத்து கலைகளும், கவிதைகளும், கதைகளுமாய், அல்லது அரசியலும், அடிதடியும், ஆர்ப்பாட்டமுமாய் !
பொய்யும்,புரட்டும்,மற்றவைகளுமாய், தலைமுறை தலைமுறையாய், இப்படியே ஒடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கை !
அப்படி வாழும் வாழ்க்கை ! சிலரால் சாதிக்க வேண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை, மிகுந்த துன்பப்பட்டு சாதித்தவைகள், சாதனைகள் ஆகின்றன. அத்தகைய சாதனைகள், உலகத்தின் பார்வையில் காலம் காலமாய் !
மனிதனால் பேசப்படும். அத்தகைய சிலர் போல் நாமும் இருக்க இன்றே முயற்சிகள் தொடங்கிடுவோம்.
- தாமோதரன்
|