பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வல்லடிக்காரரிடம் சீட்டு எழுதி வைத்து வேண்டுவது சிறப்பு.ஒரு முறை வல்லடிக்காரர் கோயில் பக்கமாக
குதிரையில் வந்த வெள்ளைக்கார துரை ஒருவர் இந்த சேமங் குதிரையைப் பார்த்துவிட்டு, இந்தக் குதிரை புல் தின்னுமா... கனைக்குமா ? என்று கேலியாகக்
கேட்டார். அப்போதைய நாட்டு அம்பலக்காரரான வீரணன் அம்பலம், இதை மௌனமாகக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார். அப்போதும் விடாத வெள்ளைக்கார
துரை, புல் தின்னாது... கனைக்காதுனு சொன்னா, இந்தக் குதிரையை இடிச்சு தள்ளிடலாமே என்று எகத்தாளமாகப் பேசினார். உடனே கோயிலுக்குள் ஓடிய வீரணன்
அம்பலம், வல்லடிக்காரர் சந்நிதியில் நின்று கண்ணீர் மல்க வேண்டினார். அப்போது கோயிலின் ஈசானிய மூலையில் கௌளி குரல் கொடுத்தது. அதை
வல்லடிக்காரரின் உத்தரவாக எடுத்துக் கொண்ட அம்பலம், துள்ளிக் ஓடி வந்து ஒரு கூடை நிறையப் புல்லைக் கொண்டு வரச் சொல்லி, அதை குதிரைக்கு
எதிரே வைத்தார். புல் அப்படியே இருக்க... துரையின் கண்களுக்கு மட்டும் குதிரை, புல் தின்பது போல் காட்சியளித்தது. அதைப் பார்த்த துரை திகைத்துப் போனார்.
மட்டுமின்றி சேமங்குதிரை அப்போது கணீரென்று கனைக்கவும் செய்தது. அதைக் கேட்டு மிரண்டு துரையின் குதிரை, பிடரி தெறிக்க ஓடத் தொடங்கியது.
ஓடும்போது கோயிலுக்குப் பக்கத்திலுள்ள கண்மாய்க கரையில் கால் இடறிக் கீழே விழுந்தது. அதனால் குதிரை மேல் இருந்த துரையும் கீழே விழுந்தார். அதன்
பிறகு குதிரையும் துரையும் எழுந்திருக்கவே இல்லை. துரையை பலி வாங்கிய அந்தக் கண்மாய் வெள்ளைக்காரன் கட்டிய கண்மாய். இப்போது அது வெள்ளக்
கண்மாய் என்று வழங்கப்படுகிறது.
பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வல்லடிக்காரரிடம் சீட்டு எழுதி வைத்து வேண்டுவது சிறப்பு. ஒரு முறை வல்லடிக்காரர் கோயில் பக்கமாக குதிரையில் வந்த வெள்ளைக்கார துரை இந்த சேமங் குதிரையைப் பார்த்துவிட்டு, இந்தக் குதிரை புல் தின்னுமா... கனைக்குமா ? என்று கேலியாகக் கேட்டார். அம்பலக்காரரான வீரணன் அம்பலம், இதை மௌனமாகக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார். அப்போதும் விடாத வெள்ளைக்கார துரை, புல் தின்னாது... கனைக்காதுனு சொன்னா, இந்தக் குதிரையை இடிச்சு தள்ளிடலாமே என்று எகத்தாளமாகப் பேசினார்.
உடனே கோயிலுக்குள் ஓடிய வீரணன் அம்பலம், வல்லடிக்காரர் சந்நிதியில் நின்று கண்ணீர் மல்க வேண்டினார். அப்போது கோயிலின் ஈசானிய மூலையில் கௌளி குரல் கொடுத்தது. அதை வல்லடிக்காரரின் உத்தரவாக எடுத்துக் கொண்ட அம்பலம், துள்ளிக் ஓடி வந்து ஒரு கூடை நிறையப் புல்லைக் கொண்டு வரச் சொல்லி, அதை குதிரைக்கு எதிரே வைத்தார். புல் அப்படியே இருக்க... துரையின் கண்களுக்கு மட்டும் குதிரை, புல் தின்பது போல் காட்சியளித்தது. அதைப் பார்த்த துரை திகைத்துப் போனார். மட்டுமின்றி சேமங்குதிரை அப்போது கணீரென்று கனைக்கவும் செய்தது.
அதைக் கேட்டு மிரண்டு துரையின் குதிரை, பிடரி தெறிக்க ஓடத் தொடங்கியது. ஓடும்போது கோயிலுக்குப் பக்கத்திலுள்ள கண்மாய்க கரையில் கால் இடறிக் கீழே விழுந்தது. அதனால் குதிரை மேல் இருந்த துரையும் கீழே விழுந்தார். அதன் பிறகு குதிரையும் துரையும் எழுந்திருக்கவே இல்லை. துரையை பலி வாங்கிய அந்தக் கண்மாய் வெள்ளைக்காரன் கட்டிய கண்மாய். இப்போது அது வெள்ளக் கண்மாய் என்று வழங்கப்படுகிறது. |